குறள் 1116

நலம்புனைந்துரைத்தல்

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

mathiyum madandhthai mukanum ariyaa
pathiyin kalangkiya meen


Shuddhananda Bharati

Beauty extolled

Stars are confused to know which is
The moon and which is woman's face.


GU Pope

The Praise of her Beauty

The stars perplexed are rushing wildly from their spheres;
For like another moon this maiden's face appears.

The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.


Mu. Varadarajan

விண்மீன்கள்‌ திங்களையும்‌ இவளுடைய முகத்தையும்‌ வேறுபாடு கண்டு அறியமுடியாமல்‌ தம்‌ நிலையில்‌ நிற்காமல்‌ கலங்கித்‌ திரிகின்றன.


Parimelalagar

இரவுக்குறிக்கண் மதி கண்டு சொல்லியது. மீன் - வானத்து மீன்கள்; மதியும் மடந்தை முகனும் அறியா - வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம்மடந்தை முகத்தினையும், 'இதுமதி' 'இதுமுகம்' என்று அறியமாட்டாது; பதியின் கலங்கிய - தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன.
விளக்கம்:
(ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல் பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு, வருகின்ற பாட்டால் பெறப்படும். இனி 'இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின மீன்கள் அறியா' என்றுரைப்பினும் அமையும்.)


Manakkudavar

(இதன் பொருள்) மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு, இவ்விரண்டினையும் அறியாது, தன்னிலையினின்றுங் கலங்கித்திரியா நின்றன் மீன்கள்,
(என்றவாறு). மீன் இயக்கத்தைக் கலங்குதலாகக் கூறினார். இது மீன் கலங்கித் திரிதலானே இவள் முகம் மதியோடு ஒக்கு மென்று கூறியது.