குறள் 1117

நலம்புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

aruvaai niraindhtha avirmathikkup pola
maruvuntoh maathar mukaththu


Shuddhananda Bharati

Beauty extolled

Are there spots on the lady's face
Just as in moon that changes phase?


GU Pope

The Praise of her Beauty

In moon, that waxing waning shines, as sports appear,
Are any spots discerned in face of maiden here?

Could there be spots in the face of this maid like those in the bright full moon ?


Mu. Varadarajan

குறைந்த இடமெல்லாம்‌ படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம்‌ உள்ளதுபோல்‌ இந்த மாதர்‌ முகத்தில்‌ களங்கம்‌ உண்டோ? இல்லையே!


Parimelalagar

இதுவும் அது. அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது? அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ?
விளக்கம்:
(இடம் - கலை. மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல், இம்மாதர் முகத் துக்கு மறுவுண்டோ ?
(என்றவாறு). இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறி வின்மையாம் ; இவள் முகத்து மறுவில்லையாதலான், அது மதியோடு ஒவ்வா தென்று கூறியது.