குறள் 1113

நலம்புனைந்துரைத்தல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

murimaeni muththam muruval vaerinaatrram
vaelunkan vaeiththo lavatku


Shuddhananda Bharati

Beauty extolled

The bamboo-shouldered has pearl-like smiles
Fragrant breath and lance-like eyes.


GU Pope

The Praise of her Beauty

As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;
Darts are the eyes of her whose shoulders like the bambu bend.

The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath,fragrance; and her dyed eyes, lances.


Mu. Varadarajan

மூங்கில்‌ போன்ற தோளை உடைய இவளுக்குத்‌ தளிரே மேனி; முத்தே பல்‌; இயற்கை மணமே மணம்‌; வேலே மை உண்ட கண்‌.


Parimelalagar

கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது. வேய்த்தோளவட்கு - வேய் போலும் தோளினையுடையவட்கு; மேனி முறி - நிறம் தளிர் நிறமாயிருக்கும்; முறுவல் முத்தம் - பல் முத்தமாயிருக்கும்; நாற்றம் வெறி - இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்; உண்கண் வேல் - உண்கண்கள் வேலாயிருக்கும்.
விளக்கம்:
(பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி, முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையால் கூறினமையின், புனைந்துரையாயிற்று; 'நின்னாற் கருதப்பட்டாளை அறியேன்' என்று சேண்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தளிர்போலும் மேனி; முத்துப்போலும் முறுவல் ; நறுநாற்றம் போலும் நாற்றம் ; வேல் போலும் உண்கண் ; வேயொத்த தோளினை யுடை யாளுக்கு,
(என்றவாறு) இது நிறமும், எயிறும், நாற்றமும், கண்ணின் வடிவும், தோளும் புகழ்ந்து கூறிற்று.