குறள் 1125

காதற்சிறப்புரைத்தல்

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

ulluvan manyaan marappin marappariyaen
ollamark kannaal kunam


Shuddhananda Bharati

Love's excellence

Can I forget? I recall always
The charms of her bright battling eyes.


GU Pope

Declaration of Love's special Excellence

I might recall, if I could once forget; but from my heart
Her charms fade not, whose eyes gleam like the warrior's dart.

If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).


Mu. Varadarajan

போர்‌ செய்யும்‌ கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான்‌ மறந்தால்‌ பிறகு நினைக்க முடியும்‌; ஆனால்‌, ஒருபோதும்‌ மறந்ததில்லையே!


Parimelalagar

ஒருவழித் தணந்துவந்த தலைமகன், 'நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. ஒள் அமர்க்கண்ணாள் குணம்; யான் மறப்பினை உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
விளக்கம்:
(மன்: ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று; மேல் தலைமகள் கூற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) மறந்தேனாயின், நினைப்பேன் யான்; மறத்தலறியேன் ; ஒள்ள மர்க் கண்ணாள் குணத்தினை,
(என்றவாறு). தோழியிற் கூடி நீங்குந் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.