குறள் 1124

காதற்சிறப்புரைத்தல்

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து

vaalthal uyirkkannal aayilai saathal
athatrkannal neengkum idaththu


Shuddhananda Bharati

Love's excellence

Life with my jewel is existence
Death it is her severance.


GU Pope

Declaration of Love's special Excellence

Life is she to my very soul when she draws nigh;
Dissevered from the maid with jewels rare, I die!

My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.


Mu. Varadarajan

ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள்‌ கூடும்‌ போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்‌; பிரியும்‌ போது உயிர்க்குச்‌ சாவு போன்றவள்‌.


Parimelalagar

பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது. ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்; நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்.
விளக்கம்:
('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும், அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.)


Manakkudavar

(இதன் பொருள்) கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள் : நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள், (
(என்றவாறு). இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலை மகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.