குறள் 1121

காதற்சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

paalodu thaenkalandh thatrrae panimoli
vaalaeyiru ooriya neer


Shuddhananda Bharati

Love's excellence

Like milk and honey the dew is sweet
From her white teeth whose word is soft.


GU Pope

Declaration of Love's special Excellence

The dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow.

The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.


Mu. Varadarajan

மென்மையான மொழிகளைப்‌ பேசுகின்ற இவளுடைய தூய பற்களில்‌ ஊறிய நீர்‌, பாலுடன்‌ தேனைக்‌ கலந்தாற்‌ போன்றதாகும்‌.


Parimelalagar

இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது. பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம் மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும்.
விளக்கம்:
('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன்சுவைபோலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறுவேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.)


Manakkudavar

காதற்சிறப்புரைத்தலாவது தலைமகன் காதல் மிகுதி கூறுதலும் தலைமகள் காதல் மிகுதி கூறுதலுமாம். இது நலம்புனைந்துரைத்தலின் பின் நிகழ்வதொன் றாகலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) பாலொடுகூடத் தேனைக் கலந்தாற்போலும் ; மிகவும் இனிமை தரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர்,
(என்றவாறு). இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறி யது.