குறள் 1140

நாணுத்துறவுரைத்தல்

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு

yaamkannin kaana nakupa arivillaar
yaampatda thaampataa aaru


Shuddhananda Bharati

Decorum defied

Fools laugh at me before my eyes
For they feel not my pangs and sighs.


GU Pope

The Abandonment of Reserve

Before my eyes the foolish make a mock of me,
Because they ne'er endured the pangs I now must drie.

Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.


Mu. Varadarajan

யாம்‌ பட்ட துன்பங்களைத்‌ தாம்‌ படாமையால்‌, அறிவில்லாதவர்‌ யாம்‌ கண்ணால்‌ காணுமாறு எம்‌ எதிரில்‌ எம்மைக்‌ கண்டு நகைக்கின்றனர்‌.


Parimelalagar

செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை!' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது. யாம் கண்ணிற்கான அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு அவர் அங்ஙனஞ் செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான்.
விளக்கம்:
('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகா நின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) யாங் கேட்குமாறு மன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை யறி விலார் நகா நின்றார் ; அவரங்ஙனஞ் செய்கின்றது யாமுற்ற நோய்கள் தாமுறா மையான்,
(என்றவாறு)