குறள் 1135

நாணுத்துறவுரைத்தல்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

thodalaik kurundhthoti thandhthaal madalodu
maalai ulakkum thuyar


Shuddhananda Bharati

Decorum defied

Palm-ride and pangs of eventide
Are gifts of wreath-like bracelet maid.


GU Pope

The Abandonment of Reserve

The maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me ‘horse of palm,' and pangs of eventide!

She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.


Mu. Varadarajan

மடலேறுதலோடு மாலைக்காலத்தில்‌ வருந்தும்‌ துயரத்தை மாலைபோல்‌ தொடர்ந்த சிறு வளையல்‌ அணிந்த காதலி எனக்குத்‌ தந்தாள்‌.


Parimelalagar


விளக்கம்:
(காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அதுபற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள்தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்,' என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) மாலை போலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோடே கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள்,
(என்றவாறு). தொடலை யென்பதற்குச் சோர்ந்தவளை யெனினும் அமையும். குறுந் தொடி - பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று.