குறள் 1131

நாணுத்துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி

kaamam ulandhthu varundhthinaarkku yaemam
madalallathu illai vali


Shuddhananda Bharati

Decorum defied

Pangs of passion find no recourse
Except riding *'palmyra horse'.


GU Pope

The Abandonment of Reserve

To those who 've proved love's joy, and now afflicted mourn,
Except the helpful ‘horse of palm’, no other strength remains.

To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.


Mu. Varadarajan

காமத்தால்‌ துன்புற்று (காதலியின்‌ அன்பு பெறாமல்‌) வருந்தினவர்க்குக்‌ காவல்‌ மடலூர்தல்‌ அல்லாமல்‌ வலிமையான துணை வேறொன்றும்‌ இல்லை.


Parimelalagar

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது. காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை.
விளக்கம்:
(ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார்' இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்,' என்பது கருத்து.)


Manakkudavar

நாணுத்துறவுரைத்தலாவது தலைமகன் தனது நாணின்மையைத் தோழிக்குக் கூற தலும் தலைமகளது நாணம். நீங்கினமையைத் தோழி தலைமகற்குக் கூறுதலுமாம். காதல் மிக்கார்க்கு நாணமில்லை யென்பதனால், அதன்பின் இது கூறப் பட்டது. (இதன் பொருள்) காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை,
(என்றவாறு) இது தலைமகனைத் தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.