Honour 97

961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்

Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour’s clearness stain.

இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும்‌, குடிப்பெருமை தாழுமாறு வரும்‌ செயல்களை ஒருவன்‌ செய்யாமல்‌ விடவேண்டும்‌.

Actions that would degrade (one’s) family should not be done; though they may be so important that not doing them would end in death.

பரிமேலழகர் உரை இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக.
விளக்கம்:
(அமையாமை - இறத்தல். 'குடிபிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநூல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.)
மணக்குடவர் உரை மானமாவது எக்காலத்தினும் தமது நிலைமையில் திரியாமை. இது குடிப்பிறந் தார்க்கு இன்றியமையாமையின் அதன்பின் கூறப்பட்டது. இது மூன்று வகைப்படும்; தமது தன்மை குன்றுவன செய்யாமையும், இகழ்வார்மாட்டுச் செல்லாமையும், இளிவரவு பொறாமையுமென . (இதன் பொருள்) இன்றியமையாத சிறப்புடையனவாயினும், தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக,
(என்றவாறு). இது பொருளும் இன்பமும் மிகினும், தன்மை குறைவன் செய்யற்க வென் றது.
962

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்

Who seek with glory to combine honour’s untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory’s name.

புகழோடு பெரிய ஆண்மையும்‌ விரும்புகின்றவர்‌, புகழ்‌ தேடும்‌ வழியிலும்‌ குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச்‌ செய்யமாட்டார்‌.

Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake

பரிமேலழகர் உரை சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார்.
விளக்கம்:
(எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும், நிகரல்லாதன செய் யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்,
(என்றவாறு). 3
963

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

Bow down thy soul, with increase blest, in happy hour;
Lift up thy heart, when stript of all by fortune’s power.

செல்வம்‌ பெருகியுள்ள காலத்தில்‌ ஒருவனுக்குப்‌ பணிவு வேண்டும்‌. செல்வம்‌ குறைந்து சுருங்கும்‌ வறுமையுள்ள காலத்தில்‌ பணியாத உயர்வு வேண்டும்‌.

In great prosperity humility is becoming; dignity, in great adversity.

பரிமேலழகர் உரை
விளக்கம்:
(பணியாமை தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும், அல்லற்காலை அது தாழ்வுசெய்யத் தாம் உயர்தலும் வேண்டும என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமை சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்; செல்வம் மிகவுஞ் சுருங்கின காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்,
(என்றவாறு)
964

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

Like hairs from off the head that fall to earth,
When fall’n from high estate are men of noble birth.

மக்கள்‌ தம்‌ உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப்‌ போன்றவர்‌ ஆவர்‌.

They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

பரிமேலழகர் உரை மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனினின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர அனையர் - தலையை விட்டு அதனின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்.
விளக்கம்:
(அந்நிலையை விடாது நின்றவழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர் ; மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து,
(என்றவாறு).
965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

If meanness, slight as ‘abrus’ grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.

மலைபோல்‌ உயர்ந்த நிலையில்‌ உள்ளவரும்‌, தாழ்வுக்குக்‌ காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும்‌ தாழ்ந்து போய்விடுவர்‌.

Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.

பரிமேலழகர் உரை குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர்.
விளக்கம்:
('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபாடு வர்; ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின், (எ-று). இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.
966

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை

It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?

மதியாமல்‌ இகழ்கின்றவரின்‌ பின்சென்று பணிந்து நிற்கும்‌ நிலை, ஒருவனுக்குப்‌ புகழும்‌ தாராது; தேவருலகிலும்‌ செலுத்தாது; வேறு பயன்‌ என்ன?

Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.

பரிமேலழகர் உரை இகழ்வார்பின் சென்று நிலை - மனத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது?
விளக்கம்:
(புகழ் பயப்பதனை 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்ற என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற்கு குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இம்பைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை; ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி?
(என்றவாறு). இது தாரை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.
967

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

Better ‘twere said, ‘He’s perished! than to gain
The means to live, following in foeman’s train.

மதியாதவரின்‌ பின்சென்று ஒருவன்‌ உயிர்‌ வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில்‌ நின்று அழிந்தான்‌ என்று சொல்லப்படுதல்‌ நல்லது

It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.

பரிமேலழகர் உரை ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று . அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று.
விளக்கம்:
(ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு; அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.)
மணக்குடவர் உரை (இ-ள்.) ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படு தல் நன்று ,
(என்றவாறு).
968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து

When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?

ஒருவனுடைய பெருந்தகைமை தன்‌ சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன்‌ உடம்பை மட்டும்‌ காத்து வாழும்‌ வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ?

For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.

பரிமேலழகர் உரை பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ?
விளக்கம்:
('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப் பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப் பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊண்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மேல் நின்றது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்). தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்து, சாவாதே இருந்து உயிரினையோம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ ,
(என்றவாறு). பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக.
969

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who, of their honour shorn, will quit the light of day.

தன்‌ உடம்பிலிருந்து மயிர்‌ நீங்கினால்‌ உயிர்‌ வாழாத கவரிமானைப்‌ போன்றவர்‌ மானம்‌ அழிய நேர்ந்தால்‌ உயிரை விட்டுவிடுவர்‌.

Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.

பரிமேலழகர் உரை மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர்.
விளக்கம்:
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருமயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மான முடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர்,
(என்றவாறு).
970

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு

Who, when dishonour comes, refuse to live, their honoured memory
Will live in worship and applause of all the world for aye!

தமக்கு யாதேனும்‌ இழிவு நேர்ந்தால்‌ உயிர்‌ வாழாத மானம்‌ உடையவரின்‌ புகழை உலகத்தார்‌ தொழுது ஏத்தி நிற்பார்கள்‌.

The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.

பரிமேலழகர் உரை இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவாவானவூர்தி - எய்துவர்,"
விளக்கம்:
(புறநா. 27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இ-ள்.) இளிவரவு உண்டானால்,உயிர் வாழாத மானமுடையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு,
(என்றவாறு).


transliteration

inri amaiyaachiirappina aayinum kunra
kunra varupa vidal

seerinum seeralla seiyaarae seerodu
paeraanmai vaendu pavar

paerukkaththu vaendum panithachiiriya surukkaththu
surukkaththu vaendum uyarvu

thalaiyin ilindhtha mayiranaiyar maandhthar
nilaiyin ilindhthak katai

kunrin anaiyaarum kunruvar kunruva
kunri anaiya seyin

pukalinraal puththaelnaatdu uiyaathaal yenmatrru
ikalvaarpin senru nilai

ottaarpin senroruvan vaalthalin andhnilaiyae
kettaan yenappaduthal nanru

marundhthomatrru oonoampum vaalkkai paerundhthakaimai
peedaliya vandhtha idaththu

mayirneeppin vaalaak kavarimaa annaar
uyirneeppar maanam varin

ilivarin vaalaatha maanam utaiyaar
olitholuthu yaeththum ulaku