குறள் 961

மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்

inri amaiyaachiirappina aayinum kunra
kunra varupa vidal


Shuddhananda Bharati

Honour

Though needed for your life in main,
From mean degrading acts refrain.


GU Pope

Honour

Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain.

Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.


Mu. Varadarajan

இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும்‌, குடிப்பெருமை தாழுமாறு வரும்‌ செயல்களை ஒருவன்‌ செய்யாமல்‌ விடவேண்டும்‌.


Parimelalagar

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக.
விளக்கம்:
(அமையாமை - இறத்தல். 'குடிபிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநூல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.)


Manakkudavar

மானமாவது எக்காலத்தினும் தமது நிலைமையில் திரியாமை. இது குடிப்பிறந் தார்க்கு இன்றியமையாமையின் அதன்பின் கூறப்பட்டது. இது மூன்று வகைப்படும்; தமது தன்மை குன்றுவன செய்யாமையும், இகழ்வார்மாட்டுச் செல்லாமையும், இளிவரவு பொறாமையுமென . (இதன் பொருள்) இன்றியமையாத சிறப்புடையனவாயினும், தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக,
(என்றவாறு). இது பொருளும் இன்பமும் மிகினும், தன்மை குறைவன் செய்யற்க வென் றது.