குறள் 960

குடிமை

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

nalamvaentin naanutaimai vaendum kulamvaentin
vaenduka yaarkkum panivu


Shuddhananda Bharati

Nobility

All gain good name by modesty
Nobility by humility.


GU Pope

Nobility

Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.


Mu. Varadarajan

ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால்‌ நாணம்‌ உடையவனாக வேண்டும்‌: குடியின்‌ உயர்வு வேண்டுமானால்‌ எல்லோரிடத்தும்‌ பணிவு வேண்டும்‌.


Parimelalagar

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக.
விளக்கம்:
(நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது, விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்" (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல. "அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர், தந்தைதாய் என்றிவர்" எல்லாரும் அடங்க, 'யார்க்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின், நாணுடைமையை விரும்புக; அவ்வண்ணமே, குலத்தை விரும்புவாராயின், யாவர்மாட்டும் தாழ்ந் தொழுகுதலை விரும்புக,
(என்றவாறு). இது பணிந்தொழுக வேண்டு மென்றது.