Wanton Women 92

911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

Those that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove.

அன்பினால்‌ விரும்பாமல்‌ பொருள்‌ காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர்‌ பேசுகின்ற இனிய சொல்‌ ஒருவனுக்குத்‌ துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.

பரிமேலழகர் உரை அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும்.
விளக்கம்:
(பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.) --
மணக்குடவர் உரை வரைவின்மகளிராவது கணிகையரோடு கலந்தொழுகினால் வரும் குற்றம் கூறுதல். முயக்கத்தில் வரைவின்மையால், வரைவின் மகளிரென்று கூறப் பட்டது. (இதன் பொருள்) அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார் சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்,
(என்றவாறு).
912

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்

Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women’s worth, from their society depart.

கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல்‌ கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின்‌ இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல்‌ விடவேண்டும்‌.

One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of aman) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).

பரிமேலழகர் உரை பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக.
விளக்கம்:
(பண்பு சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும், அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பது தோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமாகக் கூறும் குண மில்லாத மகளிரது இன்பத்தை யாராய்ந்து பார்த்து, அவரைச் சாராதொழிக, இதனாலே கணிகையர் இலக்கண மெல்லாந் தொகுத்துக் கூறினார்.
913

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று

As one in darkened room, some stranger corpse inarms,
Is he who seeks delight in mercenary women’s charms!

பொருளையே விரும்பும்‌ பொதுமகளிரின்‌ பொய்யான தழுவுதல்‌, இருட்டறையில்‌, தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத்‌ தழுவினாற்‌ போன்றது.

The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse inadark room.

பரிமேலழகர் உரை பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும்.
விளக்கம்:
(பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர்; அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங் கும் முயக்கம், இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுமைப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியது போலும்,
(என்றவாறு) இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது
914

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்

Their worthless charms, whose only weal is wealth of gain,
From touch of these the wise, who seek the wealth of grace, abstain.

பொருள்‌ ஒன்றையே பொருளாகக்‌ கொண்ட பொது மகளிரின்‌ புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும்‌ அறிவுடையோர்‌ பொருந்தமாட்டார்‌.

The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth(and not pleasure) as (their) riches.

பரிமேலழகர் உரை பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார்.
விளக்கம்:
(அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பொருளைப் பொருளாகக் கொள்வாரது புல்லிய நலத்தைத் தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார்,
(என்றவாறு).
915

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்

From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee.

இயற்கை யறிவின்‌ நன்மையால்‌ சிறப்புற்ற அறிவுடையோர்‌, பொருள்‌ தருவார்‌ எல்லார்க்கும்‌ பொதுவாக இன்பம்‌ தரும்‌ மகளிரின்‌ புன்மையான நலத்தைப்‌ பொருந்தார்‌.

Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delightsof those whose favours are common (to all).

பரிமேலழகர் உரை மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதி நன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல் நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.
விளக்கம்:
(மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்' என்றும், அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்து புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார் , எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார்,
(என்றவாறு). இது புத்திமான் சேரானென்றது.
916

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்

From touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would their own true good maintain will turn away.

அழகு முதலியவற்றால்‌ செருக்குக்‌ கொண்டு தம்‌ புன்மையான நிலையான நலத்தை விற்கும்‌ பொதுமகளிரின்‌ தோளை, தம்‌ நல்லொழுக்கத்தைப்‌ போற்றும்‌ சான்றோர்‌ பொருந்தார்‌.

Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those, who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).

பரிமேலழகர் உரை தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார்.
விளக்கம்:
(ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தந்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார் ; வனப் பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை,
(என்றவாறு)
917

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்

Who cherish alien thoughts while folding in their feigned embrace,
These none approach save those devoid of virtue’s grace.

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும்‌ ஆற்றல்‌ இல்லாதவர்‌, தம்‌ நெஞ்சில்‌ வேறுபொருளை விரும்பிக்‌ கூடும்‌ பொது மகளிரின்‌ தோளைப்‌ பொருந்துவர்‌.

Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those whoembrace (them) while their hearts covet other things.

பரிமேலழகர் உரை நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினார் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர்.
விளக்கம்:
(பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார் தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நிறையுடைய நெஞ்சில்லாதவர் தோய்வர் ; இன்பமல்லாத பிற வாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார்போலப் புணரும்வ ரது தோளினை,
(என்றவாறு). இது நிறையில்லாதார் சேர்வரென்றது.
918

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு

As demoness who lures to ruin woman’s treacherous love
To men devoid of wisdom’s searching power will prove.

வஞ்சம்‌ நிறைந்த பொதுமகளிரின்‌ சேர்க்கை, ஆராய்ந்தறியும்‌ அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்‌.

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are(as ruinous as those of) the celestail female.

பரிமேலழகர் உரை மாய மகளிர் முயக்கு - உருவு சொற்செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
(அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள். தாக்கு - தீண்டல். இவ்வுருவகத்தான், அம்முயக்கம் முன் இனிது போன்று பின் உயிர்கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவு என்பது தோன்ற அவர் மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடை யரல்லாதார்க்கு , வருத்தமாமென்று சொல்லுவர் , மாயத்தைவல்லமகளிரது முயக் கத்தை , (எ - று ) இஃது இவரை அறிவில்லாதார் சேர்வமென்றது.
919

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

The wanton’s tender arm, with gleaming jewels decked,
Is hell, where sink degraded souls of men abject.

ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின்‌ மெல்லிய தோள்‌, உயர்வில்லாத கீழ்மக்கள்‌ ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்‌.

The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.

பரிமேலழகர் உரை வரைவு இலா மாண் இழையார் மென்தோள் - உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது; விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம்.
விளக்கம்:
(உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முயக்கத்தில் வளைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளா வது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம்,
(என்றவாறு). இஃது இழிந்தார் சார்வரென்றது.
920

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு

Women of double minds, strong drink, and dice; to these giv’n o’er,
Are those on whom the light of Fortune shines no more.

இருவகைப்பட்ட மனம்‌ உடைய பொதுமகளிரும்‌ கள்ளும்‌ சூதுமாகிய இம்‌ மூவகையும்‌ திருமகளால்‌ நீக்கப்பட்டவரின்‌ உறவாகும்‌.

Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.

பரிமேலழகர் உரை இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு.
விளக்கம்:
(இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைப்பற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கிப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கவர்த்தமனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும், திரு மகளால் கடியப்பட்டாரது நட்பு,
(என்றவாறு) இது நல்குரவாவார் சார்வரென்றது.


transliteration

anpin vilaiyaar porulvilaiyum aaithotiyaar
insol ilukkuth tharum

payanthookkip panpuraikkum panpin makalir
nayanthookki nallaa vidal

porutpaentir poimmai muyakkam irutdaraiyil
yaethil pinandhthaleei atrru

porutporulaar punnalandh thoyaar arutporul
aayum arivi navar

pothunalaththaar punnalam thoyaar mathinalaththin
maanda arivi navar

thandhnalam paarippaar thoyaar thakaiserukkip
punnalam paarippaar thol

nirainaenjcham illavar thoivaar piranaechitr
paenip punarpavar thol

aayum arivinar allaarkku anangkenpa
maaya makalir muyakku

varaivilaa maanilaiyaar maenthol puraiyilaap
pooriyarkal aalum alaru

irumanap paentirum kallum kavarum
thiruneekkap pattaar thodarpu