குறள் 916

வரைவின்மகளிர்

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்

thandhnalam paarippaar thoyaar thakaiserukkip
punnalam paarippaar thol


Shuddhananda Bharati

Wanton women

Those who guard their worthy fame
Shun the wanton's vaunting charm.


GU Pope

Wanton Women

From touch of those who worthless charms, with wanton arts, display,
The men who would their own true good maintain will turn away.

Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those, who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay).


Mu. Varadarajan

அழகு முதலியவற்றால்‌ செருக்குக்‌ கொண்டு தம்‌ புன்மையான நிலையான நலத்தை விற்கும்‌ பொதுமகளிரின்‌ தோளை, தம்‌ நல்லொழுக்கத்தைப்‌ போற்றும்‌ சான்றோர்‌ பொருந்தார்‌.


Parimelalagar

தகை செருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் - ஆடல், பாடல், அழகு என்பனவற்றால் களித்துத், தம் புல்லிய நலத்தை விலை கொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும் மகளிர் தோளினை; தம் நலம் பாரிப்பார் தோயார் - அறிவொழுக்கங்களானாய தம் புகழை உலகத்துப் பரப்புதற்குரிய உயர்ந்தோர் தீண்டார்.
விளக்கம்:
(ஆடல் முதலிய மூன்றும் உடைமை அவர்க்கு மேம்பாடாகலின் 'தகை' என்றும், தோயின் அறிவொழுக்கங்கள் அழியும் ஆகலின் அவற்றால் புகழ் பரப்புவார் 'தோயார்' என்றும் கூறினார். தந்நலம் என்புழி 'நலம்' ஆகுபெயர். இவை மூன்று பாட்டானும் அவரை உயர்ந்தோர் தீண்டார் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்முடைய நலத்தை உலகின்கண் பரப்புவார் சேரார் ; வனப் பினால் களிப்புற்றுத் தமது புல்லிய நலத்தை எல்லார்மாட்டும் பரப்புவாரது தோளினை,
(என்றவாறு)