Not Offending the Great 90

891

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

The chiefest care of those who guard themselves from ill,
Is not to slight the powers of those who work their mighty will.

மேற்கொண்ட செயலைச்‌ செய்து முடிக்க வல்லவரின்‌ ஆற்றலை இகழாதிருத்தல்‌, காப்பவர்‌ செய்து கொள்ளும்‌ காவல்‌ எல்லாவற்றிலும்‌ சிறந்தது.

Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).

பரிமேலழகர் உரை ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக் கொண்டனயாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண்தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது.
விளக்கம்:
(ஆற்றல் என்பது பெருமை, அறிவு, முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும்; அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொது வகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை பெரியாரைப் பிழையாமையாவது தம்மிற் பெரிய அரசரையும், முனிவரை யும், அறிஞரையும் பிழைத்தொழுகாமை. மேல் பகையும் பகையின்கண் செய்யும் திறமும் கூறினார். தம்மிற் பெரியார் தம்மைப் பகையாகக் கொள்ளா ராயினும், தமது இகழ்ச்சி அவரால் தீமை பயக்குமாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழா தொழி தல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.
892

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

If men will lead their lives reckless of great men’s will,
Such life, through great men’s powers, will bring perpetual ill.

ஆற்றல்‌ மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல்‌ நடந்தால்‌, அது அப்‌ பெரியாரால்‌ நீங்காத துன்பத்தைத்‌ தருவதாகும்‌.

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.

பரிமேலழகர் உரை பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின்; பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவனுக்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.
விளக்கம்:
(அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம். அவையெல்லாம் தாமே செய்து கொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின், அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும்,
(என்றவாறு) இது முனிவரைப் போற்றா தொழியின், அது குற்றம் பயக்குமென்றது.
893

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு

Who ruin covet let them shut their ears, and do despite
To those who, where they list to ruin have the might.

அழிக்க வேண்டுமானால்‌ அவ்வாறே செய்துமுடிக்க வல்லவரிடத்தில்‌ தவறு செய்தலை, ஒருவன்‌ கெட வேண்டுமானால்‌ கேளாமலே செய்யலாம்‌.

If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns).

பரிமேலழகர் உரை அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க- தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதி நூலைக் கடந்து செய்க.
விளக்கம்:
(அப்பெரியாரைக் ''காலனும் காலம் பார்க்கும் பாராது - வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்'' அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க- தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதி நூலைக் கடந்து செய்க.
விளக்கம்:
(புறநா. 41) என்றார் பிறரும். நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.) --
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க, தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க,
(என்றவாறு).
894

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

When powerless man ‘gainst men of power will evil deeds essay,
Tis beck’ning with the hand for Death to seize them for its prey.

ஆற்றல்‌ உடையவர்க்கு ஆற்றல்‌ இல்லாதவர்‌ தீமை செய்தால்‌, தானே வந்து அழிக்கவல்ல எமனைக்‌ கைகாட்டி அழைத்தாற்‌ போன்றது.

The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them).

பரிமேலழகர் உரை ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்-மூவகை ஆற்றலும் உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று - தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கை காட்டி அழைத்தால் ஒக்கும்.
விளக்கம்:
(கையால் விளித்தல் - இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர் முதலிய கோடற்கு உரியாரை அதற்கு முன்னே விரைந்து தம்மேல் வருவித்துக் கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற்போலும்,
(என்றவாறு)
895

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்

Who dare the fiery wrath of monarchs dread,
Where’er they flee, are numbered with the dead.

மிக்க வலிமை உடைய அரசனால்‌ வெகுளப்பட்டவர்‌, அவனிடமிருந்து தப்புவதற்காக எங்கே சென்றாலும்‌ எங்கும்‌ வாழ முடியாது.

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go.

பரிமேலழகர் உரை வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் - அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார்.
விளக்கம்:
(இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின் வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங் கொடுப்பாரில்லை; உளராயின், இவர் இனி ஆகார் என்பது நோக்கி அவனோடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வெளவுதற்பொருட்டும் கொல்வர்; அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச் சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்; வெய்ய வலியையுடைய வேந்தனால் செறப்பட்டார், (எ - று ). இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.
896

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

Though in the conflagration caught, he may escape from thence:
He ‘scapes not who in life to great ones gives offence.

தீயால்‌ சுடப்பட்டாலும்‌ ஒருகால்‌ உயிர்பிழைத்து வாழ முடியும்‌; ஆற்றல்‌ மிகுந்த பெரியாரிடத்தில்‌ தவறு செய்து நடப்பவர்‌ தப்பிப்‌ பிழைக்க முடியாது.

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees).

பரிமேலழகர் உரை எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் - காட்டிடைச் சென்றானொருவன் ஆண்டைத் தீயாற் சுடப்பட்டானாயினும் ஒருவாற்றான் உயிருய்தல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார் - தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார், எவ்வாற்றானும் உயிருய்யார்.
விளக்கம்:
(தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயிர்மேற் சேறலின், இடையை உய்யவும் கூடும். அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தான் நிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின்; (குறள் -6) அது கூடாதாகலான், அதற்கு ஏழுவாய பிழை செய்யற்க என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்; பெரியாரைப் பிழைத் தொழுகுவார் உய்யார்,
(என்றவாறு). இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட்ட உயிர்க் கேடு வருமென்று கூறினார்.
897

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்

Though every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown?

தகுதியால்‌ சிறப்புற்ற பெரியார்‌ ஒருவனை வெகுண்டால்‌ அவனுக்குப்‌ பலவகையால்‌ மாண்புற்ற வாழ்க்கையும்‌ பெரும்‌ பொருளும்‌ இருந்தும்‌ என்ன பயன்‌?

If aking incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?

பரிமேலழகர் உரை தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்?
விளக்கம்:
(உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லாவகையும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொரு ளும் என்ன பயனுடையனவாம்; பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவா ராயின்,
(என்றவாறு). எல்லாவகையுமாவன - சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின.
898

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து

If they, whose virtues like a mountain rise, are light esteemed;
They die from earth who, with their households, ever-during seemed.

மலைபோன்ற பெரியார்‌ கெட நினைத்தால்‌, உலகில்‌ அழியாமல்‌ நிலைபெற்றாற்போல்‌ உள்ளவரும்‌ தம்‌ குடியோடு அழிவர்‌.

If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth.

பரிமேலழகர் உரை குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடுமாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியோடு மாய்வர்.
விளக்கம்:
(வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். ''மல்லல் மலையனைய மாதவர்'' [சீவக. முத்தி. 191] என்றார் பிறரும். நிலை பெற்றார் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின், உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர், (எ-று). குன்ற மதித்தல் - அவமதித்தல்.
899

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

When blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame.

உயர்ந்த கொள்கையுடைய பெரியார்‌ சீறினால்‌, நாட்டை ஆளும்‌ அரசனும்‌ இடைநடுவே முரிந்து அரசு இழந்து கெடுவான்‌.

If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.

பரிமேலழகர் உரை ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்த முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடைய தன் பதம் இழந்து கெடும்.
விளக்கம்:
(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற கணிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய், அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உயர்ந்த கோட்பாட்டையுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும்,
(என்றவாறு). இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.
900

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்

Though all-surpassing wealth of aid the boast,
If men in glorious virtue great are wrath, they’re lost.

மிகச்‌ சிறப்பாக அமைந்த பெருமையுடையவர்‌ வெகுண்டால்‌, அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள்‌ உடையவரானாலும்‌ தப்பிப்‌ பிழைக்க முடியாது.

Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless.

பரிமேலழகர் உரை சிறந்தது அமைந்த சீரார் செறின் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார்.
விளக்கம்:
(சார்பு -அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உள்ளார் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்; மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின்,
(என்றவாறு) இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.


transliteration

aatrruvaar aatrral ikalaamai potrruvaar
potrralul yellaam thalai

paeriyaaraip paenaathu olukitr paeriyaaraal
paeraa idumpai tharum

kedalvaentin kaelaathu seika adalvaentin
aatrru pavarkan ilukku

kootrraththaik kaiyaal viliththatrraal aatrruvaarkku
aatrraathaar innaa seyal

yaanduchsenru yaandum ularaakaar vaendhthuppin
vaendhthu serappat davar

yeriyaal sudappatinum uivuntaam uiyaar
paeriyaarp pilaiththoluku vaar

vakaimaanda vaalkkaiyum vaanporulum yennaam
thakaimaanda thakkaar serin

kunrannaar kunra mathippin kutiyodu
ninrannaar maaivar nilaththu

yaendhthiya kolkaiyaar seerin itaimurindhthu
vaendhthanum vaendhthu kedum

irandhthamaindhtha saarputaiyar aayinum uiyaachiirandhthamaindhtha
uiyaachiirandhthamaindhtha seeraar serin