Cherishing Guests 9

81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

All household cares and course of daily life have this in view.
Guests to receive with courtesy, and kindly acts to do.

வீட்டில்‌ இருந்து பொருள்களைக்‌ காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்‌ விருந்தினரைப்‌ போற்றி உதவிசெய்யும்‌ பொருட்டே ஆகும்‌.

The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

பரிமேலழகர் உரை இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம்-மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு-விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.
விளக்கம்:
(எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.) --
மணக்குடவர் உரை விருந்தோம்பலாவது உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டுமென்பது கூறல். (இதன் பொருள்) இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம், வந்த விருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக,
(என்றவாறு).
82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டாற்பாற் றன்று

Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.

விருந்தினராக வந்தவர்‌ வீட்டின்‌ புறத்தே இருக்கத்‌ தான்‌ மட்டும்‌ உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும்‌ அது விரும்பத்தக்கது அன்று.

It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

பரிமேலழகர் உரை சாவா மருந்து எனினும் உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும்; விருந்து புறத்ததாத் தானுண்டல்-தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று-விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
விளக்கம்:
(சாவா மருந்து: சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றயே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும். அதனை ஒழிக,' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதியுடைத்தன்று,
(என்றவாறு).
83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share.

தன்னை நோக்கி வரும்‌ விருந்தினரை நாள்தோறும்‌ போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால்‌ வருந்திக்‌ கெட்டுப்‌ போவதில்லை.

The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.

பரிமேலழகர் உரை வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை-தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று-நல்குரவான் வருந்திக் கெடுதல் இல்லை.
விளக்கம்:
(நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நாடோறும் வந்த விருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்த முற்றுக் கேடுபடுவதில்லை ,
(என்றவாறு).
84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்

With smiling face he entertains each virtuous guest,
‘Fortune’ with gladsome mind shall in his dwelling rest.

நல்ல விருந்தினராய்‌ வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில்‌ மனமகிழ்ந்து திருமகள்‌ வாழ்வாள்‌.

Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.

பரிமேலழகர் உரை செய்யான் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல்-முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.
விளக்கம்:
(மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) திருவினாள் மனம் பொருந்தி உறையும்; நல்லவிருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்,
(என்றவாறு) இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.
85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

Who first regales his guest, and then himself supplies,
O’er all his fields, unsown, shall plenteous harvests rise.

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில்‌ விதையும்‌ விதைக்க வேண்டுமோ?

Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?

பரிமேலழகர் உரை விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ-வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா.
விளக்கம்:
('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.
86

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு

The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he.

வந்த விருந்தினரைப்‌ போற்றி, இனி வரும்‌ விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன்‌, வானுலகத்தில்‌ உள்ள தேவர்க்கும்‌ நல்ல விருந்தினனாவான்‌.

He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.

பரிமேலழகர் உரை செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான்-தன்கண் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத், தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து-மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம்.
விளக்கம்:
('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன்,
(என்றவாறு) வரவு பார்த்தல் - விருந்தின்றி யுண்ணாமை.
87

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain.

விருந்தோம்புதலாகிய வேள்வியின்‌ பயன்‌ இவ்வளவு என்று அளவு படுத்திக்‌ கூறத்தக்கது அன்று; விருந்தினரின்‌ தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்‌.

The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.

பரிமேலழகர் உரை வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை-விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.
விளக்கம்:
(ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு "தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால்-வான் சிறிதாப் போர்த்து விடும்" (நாலடி,38) ஆகலின், 'இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை' என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினை யுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை; அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்,
(என்றவாறு).
88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

With pain they guard their stores, yet ‘All forlorn are we,’ they’ll cry,
Who cherish not their guests, nor kindly help supply.

விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில்‌ ஈடுபடாதவர்‌, பொருள்களை வருந்திக்‌ காத்து (பின்பு இழந்து) பற்றுக்‌ கோடு இழந்தோமே என்று இரங்குவர்‌.

Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “we have laboured and laid up wealth and are now without support.”

பரிமேலழகர் உரை பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்-நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார்-அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார்.
விளக்கம்:
("ஈட்டிய ஒண்பொருளைக், காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்" (நாலடி. 280) ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விருந்தினரைப் போற்றி யுபசரிக்க மாட்டாதார், வருந்தி யுடம் பொன்றையும் ஒப்பிப் பொருளற்றோமென் றிரப்பர்,
(என்றவாறு)
89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

To turn from guests is penury, though worldly goods abound;
‘Tis senseless folly, only with the senseless found.

செல்வ நிலையில்‌ உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப்‌ போற்றாத அறியாமையாகும்‌; அஃது அறிவிலிகளிடம்‌ உள்ளதாகும்‌.

That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.

பரிமேலழகர் உரை உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை-உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு-அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம்.
விளக்கம்:
(உடைமை-பொருளுடையனாம் தன்மை. பொருளாள் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உடைமையின்கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித் தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார்மாட்டே யுளதாம்,
(என்றவாறு)
90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து

The flower of ‘Anicha’ withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest’s heart within him will fail.

அனிச்சப்பூ மோந்தவுடன்‌ வாடிவிடும்‌; அதுபோல்‌ முகம்‌ மலராமல்‌ வேறுபட்டு நோக்கியவுடன்‌ விருந்தினர்‌ வாடி நிற்பர்‌.

As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.

பரிமேலழகர் உரை அனிச்சம் மோப்பக் குழையும்-அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும்-விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.
விளக்கம்:
('அனிச்சம்' ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது; விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர்,
(என்றவாறு). இது முகநோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.


transliteration

irundhthompi ilvaalva thaellaam virundhthompi
vaelaanmai seithatr porutdu

virundhthu puraththathaath thaanundal saavaa
marundhthaeninum vaentaatrpaatr ranru

varuvirundhthu vaikalum oampuvaan vaalkkai
paruvandhthu paalpaduthal inru

akanamarndhthu seiyaal uraiyum mukanamarndhthu
nalvirundhthu oampuvaan il

viththum idalvaendum kollo virundhthompi
michil misaivaan pulam

selvirundhthu oampi varuvirundhthu paarththiruppaan
nalvarundhthu vaanath thavarkku

inaiththunaith thaenpathon rillai virundhthin
thunaiththunai vaelvip payan

parindhthompip patrratrraem yenpar virundhthompi
vaelvi thalaippataa thaar

utaimaiyul inmai virundhthompal oampaa
madamai madavaarkan undu

moppak kulaiyum anichcham mukandhthirindhthu
nokkak kunalyum virundhthu