The Possession of Love 8

71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover’s secret plain.

அன்புக்கும்‌ அடைத்துவைக்கும்‌ தாழ்‌ உண்டோ? அன்புடையவரின்‌ சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும்‌ அன்பைப்‌) பலரும்‌ அறிய வெளிப்படுத்திவிடும்‌.

Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.

பரிமேலழகர் உரை அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ-அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ; ஆர்வலர் புன்கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள் நின்ற அன்பினை எல்லாரும் அறியத் தூற்றும் ஆதலான்.
விளக்கம்:
(உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை., கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான் அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதலுடையவனாதல். (இதன் பொருள்) அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உள தாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்,
(என்றவாறு). 10
72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

The loveless to themselves belong alone;
The loving men are others’ to the very bone.

அன்பு இல்லாதவர்‌ எல்லாப்‌ பொருளையும்‌ தமக்கே உரிமையாகக்‌ கொண்டு வாழ்வர்‌; அன்பு உடையவர்‌ தம்‌ உடம்பையும்‌ பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்‌.

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

பரிமேலழகர் உரை அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர்-அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்-அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர்.
விளக்கம்:
(ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர். என்பும் உரியராதல் "தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்" (புறநா.43) முதலாயினார்கண் காண்க.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரியராக வுடையர் ; அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக் சங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர்,
(என்றவாறு) அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.
73

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

Of precious soul with body’s flesh and bone,
The union yields one fruit, the life of love alone.

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும்‌ வாழ்க்கையின்‌ பயன்‌ என்று கூறுவர்‌.

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

பரிமேலழகர் உரை ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப-அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.
விளக்கம்:
(பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத் தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப் பிறப்பின்கண் உடம்போடு இடை விடாத நட்பினை,
(என்றவாறு).
74

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.

அன்பு, பிறரிடம்‌ விருப்பம்‌ உடையவராக வாழும்‌ தன்மையைத்‌ தரும்‌; அஃது எல்லோரிடத்திலும்‌ நட்பு என்று சொல்லப்படும்‌ அளவற்ற சிறப்பைத்‌ தரும்‌.

Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.

பரிமேலழகர் உரை அன்பு ஆர்வமுடைமை ஈனும் ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும்-அவ்விருப்பமுடைமைதான் இவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்.
விளக்கம்:
(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச் சிறப்பு' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அன்பு தரும் ஆர்வமுடைமையை ; அவ்வார்வமுடைமை தரும், நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை,
(என்றவாறு)
75

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

Sweetness on earth and rarest bliss above,
These are the fruits of tranquil life of love.

உலகத்தில்‌ இன்பம்‌ உற்று வாழ்கின்றவர்‌ அடையும்‌ சிறப்பு, அன்பு உடையவராகிப்‌ பொருந்தி வாழும்‌ வாழ்க்கையின்‌ பயன்‌ என்று கூறுவர்‌.

They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.

பரிமேலழகர் உரை அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப-அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு-இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின் பத்தினை.
விளக்கம்:
('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டு இன்புறுவர் ஆகலின், 'இன்புற்றார் எய்தும் சிறப்பு' என்றார். தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை. ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செல் வென்று சொல்லுவர்; இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை,
(என்றவாறு). இது போகந் துய்ப்பரென்றது.
76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.

அறியாதவர்‌, அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும்‌ என்று கூறுவர்‌; ஆராய்ந்து பார்த்தால்‌ வீரத்திற்கும்‌ அதுவே துணையாக நிற்கின்றது.

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

பரிமேலழகர் உரை அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார்-அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கம் அஃதே துணை-ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.
விளக்கம்:
(ஒருவன் செய்த பகைமைப்பற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன்மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார்; 'துன்பத்திற்கு யாரே துணையாவார்' (குறள் 1299) என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அன்பானது அறஞ்செய்வார்ககே சார்பாமென்பர் அறியாதார் ; அவ்வன்பு மறஞ் செய்வார்க்குத் துணையாம்,
(என்றவாறு)
77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

As sun’s fierce ray dries up the boneless things,
So loveless beings virtue’s power to nothing brings.

எலும்பு இல்லாத உடம்போடு வாழும்‌ புழுவை வெயில்‌ காய்ந்து வருத்துவதுபோல்‌, அன்பு இல்லாத உயிரை அறம்‌ வருத்தும்‌.

Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.

பரிமேலழகர் உரை என்பு இலதனை வெயில் போலக் காயும்-என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்; அன்பு இலதனை அறம்-அன்பில்லாத உயிரை அறக்கடவுள்.
விளக்கம்:
('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம், 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் 'காயும்' என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு ''அல்லவை செய்தற்கு அறம் கூற்றம்''(நான்மணிக்.83) எனப் பிறரும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) என்பிலாத சீவனை வெயில் சுடு மாறு போற் சுடும்; அன்பிலாத வுயிரினை அறம்,
(என்றவாறு).
78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.

அகத்தில்‌ அன்பு இல்லாமல்‌ வாழும்‌ உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில்‌ பட்டமரம்‌ தளிர்த்தாற்‌ போன்றது.

The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.

பரிமேலழகர் உரை அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை-மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று-வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்.
விளக்கம்:
(கூடாது என்பதாம். வன்பால்-வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறினைப் படர்க்கைப் பெயர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னிடத்து அன்பில்லாத வுயிரினது வாழ்க்கை , வலியபாரிடத்து உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும்,
(என்றவாறு). தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.
79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

Though every outward part complete, the body’s fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?

உடம்பின்‌ அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின்‌ புறத்து உறுப்புக்கள்‌ எல்லாம்‌ என்ன பயன்‌ செய்யும்‌?

Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

பரிமேலழகர் உரை யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு-யாக்கை யகத்தின்கண் நின்ற (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்-ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்!
விளக்கம்:
(புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின், 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன. 'யாக்கையின் கண் முதலிய உறுப்புகள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர். அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புக்க ளெல்லாம் யாதினைச் செய்யும்?
(என்றவாறு)
80

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.

அன்பின்‌ வழியில்‌ இயங்கும்‌ உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்‌; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத்‌ தோல்‌ போர்த்த வெற்றுடம்பே ஆகும்‌.

That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

பரிமேலழகர் உரை அன்பின் வழியது உயிர்நிலை-அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த-அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா.
விளக்கம்:
(இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பு இல்வழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) உயிர்க்கு நிலைபேறு அன்பின் வழியதாகிய அறத்தினான் . வரும்; ஆதலால், அவ் வன்பிலாதார்க்கு உளதாவது என்பின்மேற் றோலினாற் போர்க்கப்பட்ட வுடம்பு,
(என்றவாறு) இது வீடு பெறாரென்றது.


transliteration

anpitrkum untoh ataikkundhthaal aarvalar
punkaneer poochal tharum

anpilaar yellaam thamakkuriyar anputaiyaar
yenpum uriyar pirarkku

anpodu iyaindhtha valakkenpa aaruyirkku
yenpodu iyaindhtha thodarpu

anpueenum aarvam utaimai athueenum
athueenum nanpaennum naataachiirappu

anputrru amarndhtha valakkenpa vaiyakaththu
vaiyakaththu inputrraar yeithuchiirappu

araththitrkae anpusaar paenpa ariyaar
maraththitrkum akhthae thunai

yenpi lathanai vaeyilpolak kaayumae
anpi lathanai aram

anpakath thillaa uyirvaalkkai vanpaatrkan
vatrral marandhthalirth thatrru

puraththurup paellaam yevanseiyum yaakkai
akaththuruppu anpi lavarkku

anpin valiyathu uyirnilai akhthilaarkku
yenputhol porththa udampu