குறள் 75

அன்புடைமை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

anputrru amarndhtha valakkenpa vaiyakaththu
vaiyakaththu inputrraar yeithuchiirappu


Shuddhananda Bharati

Loving

The crowning joy of home life flows
From peaceful psychic love always.


GU Pope

The Possession of Love

Sweetness on earth and rarest bliss above,
These are the fruits of tranquil life of love.

They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.


Mu. Varadarajan

உலகத்தில்‌ இன்பம்‌ உற்று வாழ்கின்றவர்‌ அடையும்‌ சிறப்பு, அன்பு உடையவராகிப்‌ பொருந்தி வாழும்‌ வாழ்க்கையின்‌ பயன்‌ என்று கூறுவர்‌.


Parimelalagar

அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப-அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு-இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின் பத்தினை.
விளக்கம்:
('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டு இன்புறுவர் ஆகலின், 'இன்புற்றார் எய்தும் சிறப்பு' என்றார். தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை. ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செல் வென்று சொல்லுவர்; இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை,
(என்றவாறு). இது போகந் துய்ப்பரென்றது.