குறள் 87

விருந்தோம்பல்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

inaiththunaith thaenpathon rillai virundhthin
thunaiththunai vaelvip payan


Shuddhananda Bharati

Hospitality

Worth of the guest of quality
Is worth of hospitality.


GU Pope

Cherishing Guests

To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain.

The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.


Mu. Varadarajan

விருந்தோம்புதலாகிய வேள்வியின்‌ பயன்‌ இவ்வளவு என்று அளவு படுத்திக்‌ கூறத்தக்கது அன்று; விருந்தினரின்‌ தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்‌.


Parimelalagar

வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை-விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.
விளக்கம்:
(ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு "தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால்-வான் சிறிதாப் போர்த்து விடும்" (நாலடி,38) ஆகலின், 'இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை' என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினை யுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை; அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்,
(என்றவாறு).