Evil Friendship 82

811

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது

Though evil men should all-absorbing friendship show,
Their love had better die away than grow.

அன்பு மிகுதியால்‌ பருகுவார்போல்‌ தோன்றினாலும்‌ நற்பண்பு இல்லாதவரின்‌ நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத்‌ தேய்ந்து குறைவது நல்லது.

The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love)while they are really destitute of goodness is far better than its increase.

பரிமேலழகர் உரை பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல் மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று.
விளக்கம்:
('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர் 78) என்றார் பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார். இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.) --
மணக்குடவர் உரை தீநட்பாவது தீயகுணத்தாராகிய மாந்தரோடு நட்டதனால் வரும் குற்றங் கூறுதல். (இதன் பொருள்) கண்ணினால் பருகுவாரைப் போலத் தமக்கு அன்புடையராயிருப் பினும், குணமில்லாதார் நட்புப் பெருகுமதனினும் குறைதல் நன்று,
(என்றவாறு). இது குணமில்லாதார் நட்புத் தீதென்றது.
812

உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

What though you gain or lose friendship of men of alien heart,
Who when you thrive are friends, and when you fail depart?

தமக்குப்‌ பயன்‌ உள்ளபோது நட்புச்‌ செய்து, பயன்‌ இல்லாதபோது நீங்கிவிடும்‌ தகுதியில்லாதவரின்‌ நட்பைப்‌ பெற்றாலும்‌ என்ன? இழந்தாலும்‌ என்ன?

Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave whenthere is none ?

பரிமேலழகர் உரை உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப் பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடு யாது?
விளக்கம்:
(தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின், அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செல்வம் மிக்க காலத்து நட்புக் கொண்டு, அஃது அற்ற காலத்து நீங்குகின்ற நிகரில்லாதார் நட்பைப் பெற்றதனால் வரும் நன்மை யாது? இழந்தத னால் வரும் தீமை யாது?
(என்றவாறு). மக்களுள் இவரோடு ஒத்த இழிவுடையார் இன்மையான், ஒப்பிலார் என் றார். இது காலபுருடர் நட்புத் தீதென்றது.
813

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்

These are alike: the friends who ponder friendship’s gain
Those who accept whate’er you give, and all the plundering train.

கிடைக்கும்‌ பயனை அளந்து பார்க்கும்‌ நண்பரும்‌, அன்பைக்‌ கொள்ளாமல்‌ பெறுகின்ற பொருளைக்‌ கொள்ளும்‌ விலைமகளிரும்‌, கள்வரும்‌ ஒரு நிகரானவர்‌.

Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining theirgains, and thieves are (all) of the same character.

பரிமேலழகர் உரை உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால் வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் - கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும், பொது மகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர்.
விளக்கம்:
(நட்பு-ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின் கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமக்கு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நட்டோர்க்கும் தமக்கும் வரும் நன்மை தீமைகளை யொக்கப் பார்த்துத் தமக்கு நன்மையாகுமதனைச் சீர்தூக்கும் நட்டோரும், பெற்றது கொள்ளும் கணிகையரும், கள்வருமென்று கூறப்பட்டவர் தம்முள் ஒப்பார்.
814

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

A steed untrained will leave you in the tug of war;
Than friends like that to dwell alone is better far.

போர்‌ வந்தபோது களத்தில்‌ தள்ளிவிட்டு ஓடும்‌ அறிவில்லாத குதிரை போன்றவரின்‌ உறவைவிட, ஒரு நட்பும்‌ இல்லாமல்‌ தனித்திருத்தலே சிறந்தது.

Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses whichthrow down (their riders) in the fields of battle.

பரிமேலழகர் உரை அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் - அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல் வாரது தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து.
விளக்கம்:
(கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப்படா மல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும் ஒருவன் தனியனாதல் நன்று,
(என்றவாறு). இது பகைவர் நட்புத் தீமை பயக்கு மென்றது.
815

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று

‘Tis better not to gain than gain the friendship profitless
Of men of little minds, who succour fails when dangers press.

காவல்‌ செய்து வைத்தாலும்‌ காவல்‌ ஆகாத கீழ்மக்களின்‌ தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்‌.

It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (theirfriends) even when appointed to do so.

பரிமேலழகர் உரை செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின் எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று.
விளக்கம்:
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை நன்று' என்பதற்கு மேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத' என்னும் பெயரெச்சம் 'கேண்மை' என்னும் பெயர் கொண்டது; 'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று வற்றும். இவை இரண்டு பாட்டானும் தொலைவில் துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நட்புச் செய்தாலும் தனக்குப் பாதுகாவலாதல் இல்லாத புல்லியாரது புல்லிய நட்பைப் பெறுவதிலும், பெறாமை நன்று,
(என்றவாறு). இது சிறியார் நட்புத் தீமைதருமென்றது. சிறியார் - சூதர், வேட்டைக் காரர், பெண்டிர் போல்வார்.
816

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

Better ten million times incur the wise man’s hate,
Than form with foolish men a friendship intimate.

அறிவில்லாதவனுடைய மிகப்‌ பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின்‌ நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்‌.

The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.

பரிமேலழகர் உரை பேதை பெருங்கெழிஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்- அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
விளக்கம்:
('கெழீஇய' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒரு தீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு' என்று பாடம் ஓதுவாரும் உளர்..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அறிவில்லாதார் மிகவும் கெழுமிய நட்பாகுமதனினும், அறிய வுடையார் பகைமை கோடிமடங்கு மிக்க நன்மையை உண்டாக்கும்,
(என்றவாறு). இது பேதைமையார் நட்புத் தீமை பயக்கு மென்றது.
817

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்

From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that’s formed with laughers vain.

(அகத்தில்‌ அன்பு இல்லாமல்‌ புறத்தில்‌) நகைக்கும்‌ தன்மை உடையவரின்‌ நட்பைவிட, பகைவரால்‌ வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்‌.

What comes from enemies is a hundred million times more profitable than what comes from thefriendship of those who cause only laughter.

பரிமேலழகர் உரை நகை வகையர் ஆகிய நட்பின் - தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக் கோடி மடங்கு நல்ல.
விளக்கம்:
(நட்பு: ஆகு பெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக் கோடி மடங்கு நன்மை மிகும்,
(என்றவாறு). நகைவகையர் - காமுகர் - வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.
818

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்

Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew.

முடியும்‌ செயலையும்‌ முடியாதபடி செய்து கெடுப்பவரின்‌ உறவை, அவர்‌ அறியுமாறு ஒன்றும்‌ சொல்லாமலே தளரச்‌ செய்து கைவிட வேண்டும்‌.

Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability tocarry out what they (really) could do.

பரிமேலழகர் உரை ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும் கருமத்தை முடியாதாகச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச் சொல்லாதே சோர விடுக.
விளக்கம்:
(முடியாதாகுதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்: விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒரு கால் ஓய விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர் ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார். நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மாலியலும் கருமத்தை முடியாது வருத்துமவர் நட்பை , நட் பென்று சொல்லுவதும் செய்யாராய் வீழவிடுக,
(என்றவாறு). இஃது அழுக்காறுடையார் நட்புத் தீதென்றது.
819

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு

E’en in a dream the intercourse is bitterness
With men whose deeds are other than their words profess.

செய்யும்‌ செயல்‌ வேறாகவும்‌ சொல்லும்‌ சொல்‌ வேறாகவும்‌ உள்ளவரின்‌ நட்பு, ஒருவனுக்குக்‌ கனவிலும்‌ துன்பம்‌ தருவதாகும்‌.

The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in(one’s) dreams.

பரிமேலழகர் உரை வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும் சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும் இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.
விளக்கம்:
(வினை சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால் 'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை; இழிவு சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செய்யுந்தொழில் வேறாக, சொல்லுங்கற்று வேறாக, ஒழுகு வாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின்கண்ணும் இன் னாது,
(என்றவாறு). இது பொய் கூறுவார் நட்புத் தீதென்றது.
820

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு

In anywise maintain not intercourse with those,
Who in the house are friends, in hall are slandering foes.

தனியே வீட்டில்‌ உள்ளபோது பொருந்தியிருந்து, பலர்‌ கூடிய மன்றத்தில்‌ பழித்துப்‌ பேசுவோரின்‌ நட்பை எவ்வளவு சிறிய அளவிலும்‌ அணுகாமல்‌ விடவேண்டும்‌.

Avoid even the least approach to a contraction of friendship with those who would love you inprivate but ridicule you in public.

பரிமேலழகர் உரை மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின் கண் இருந்து பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க
விளக்கம்:
(மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை கூறப்பட்டது..)
மணக்குடவர் உரை (இதன் பொருள்)மனையின் கண் நட்டோராயிருந்து, மன்றின்கண் குற்றங் கூறுவா ரது நட்பை , சிறிதும் செறிதலைத் தவிர்க,
(என்றவாறு). இது புறங்கூறுவார் நட்புத் தீதென்றது.


transliteration

parukuvaar polinum panpilaar kaenmai
paerukalitr kunral inithu

urinnatdu arinoruum oppilaar kaenmai
paerinum ilappinum yen

uruvathu seerthookkum natpum paeruvathu
kolvaarum kalvarum naer

amarakaththu aatrrarukkum kallaamaa annaar
thamarin thanimai thalai

seithaemanj saaraachiiriyavar punkaenmai yeithalin
yeithalin yeithaamai nanru

paethai paerungkeleei natpin arivutaiyaar
yaethinmai koati urum

nakaivakaiya raakiya natpin pakaivaraal
paththaduththa koati urum

ollum karumam udatrru pavarkaenmai
sollaataar chora vidal

kanavinum innaathu manno vinaivaeru
solvaeru pattaar thodarpu

yenaiththum kurukuthal oampal manaikkeleei
manril palippaar thodarpu