குறள் 814

தீ நட்பு

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

amarakaththu aatrrarukkum kallaamaa annaar
thamarin thanimai thalai


Shuddhananda Bharati

Bad friendship

Better be alone than trust in those
That throw in field like faithless horse.


GU Pope

Evil Friendship

A steed untrained will leave you in the tug of war;
Than friends like that to dwell alone is better far.

Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses whichthrow down (their riders) in the fields of battle.


Mu. Varadarajan

போர்‌ வந்தபோது களத்தில்‌ தள்ளிவிட்டு ஓடும்‌ அறிவில்லாத குதிரை போன்றவரின்‌ உறவைவிட, ஒரு நட்பும்‌ இல்லாமல்‌ தனித்திருத்தலே சிறந்தது.


Parimelalagar

அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் - அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல் வாரது தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து.
விளக்கம்:
(கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும், பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால் வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் 'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்..)


Manakkudavar

(இதன் பொருள்) தெருவின்கண் நெறிப்பட நடந்து அமரின்கண் நெறிப்படா மல் நடந்து ஏறினவன் வலிமையைக் கெடுக்கும் அறிவில்லாத குதிரையைப் போல்வார் தமராவதினும் ஒருவன் தனியனாதல் நன்று,
(என்றவாறு). இது பகைவர் நட்புத் தீமை பயக்கு மென்றது.