Investigation in forming Friendships 80

791

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு

To make an untried man your friend is ruin sure;
For friendship formed unbroken must endure.

நட்புச்‌ செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை: ஆகையால்‌ ஆராயாமல்‌ நட்புச்‌ செய்வதைப்‌ போல்‌ கெடுதியானது வேறு இல்லை.

As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is noevil so great as contracting a friendship without due inquiry.

பரிமேலழகர் உரை நட்பு ஆள்பவர்க்கு நட்ட பின் வீடு இல்லை - நட்பினை விரும்பி அதன்கண்ணே நிற்பார்க்கு ஒருவனோடு நட்புச் செய்தபின் அவனை விடுதலுண்டாகாது; நாடாது நட்டலின் கேடு இல்லை-ஆகலான் ஆராயாது நட்புச் செய்தல்போலக் கேடுதருவது பிறிதில்லை.
விளக்கம்:
(ஆராய்தல்: குணம் செய்கைகளது நன்மையை ஆராய்தல். கேடு-ஆகுபெயர். நட்கின் தாம் அவர் என்னும் வேற்றுமையின்மையின், 'வீடு இல்லை' என்றும், அவ்வேற்றுமை இன்மையான் அவன்கண் பழி பாவங்கள் தமவாமாகலின், இருமையும் கெடுவர் என்பது நோக்கி, 'நாடாது நட்டலின் கேடு இல்லை,' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை நட்பாராய்தலாவது நட்பிற்கு ஆவாரை ஆராய்ந்து கொள்ளுமாறு கூறு தல். நட்குங்கால் ஆராய்ந்து நட்கவேண்டுமாதலின், அதன் பின் இது கூறப்பட் டது. (இதன் பொருள்) நட்பை விரும்பியாள்பவர்க்கு ஒருவனை ஆராயாது நட்புச் செய் வது போலக் கேடுதருவதில்லை; நட்டபின், அவனை விடுதலில்லை யாயின், (எ-று). இது நட்பாராய்தல் வேண்டு மென்றது.
792

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்

Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக்‌ கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில்‌ தான்‌ சாவதற்குக்‌ காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்‌.

The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) todeath.

பரிமேலழகர் உரை ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக் கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும்.
விளக்கம்:
('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேல வாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளா தான் கொண்ட நட்பு, பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும், (எ - று ) இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.
793

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு

Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.

ஒருவனுடைய குணத்தையும்‌, குடிப்பிறப்பையும்‌, குற்றத்தையும்‌, குறையாத இனத்தாரின்‌ இயல்பையும்‌ அறிந்து அவனோடு நட்புக்‌ கொள்ளவேண்டும்‌.

Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one’srelations.

பரிமேலழகர் உரை குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க-அவனோடு நட்புச் செய்க.
விளக்கம்:
(குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இன்னும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பர் அறிந்து யாக்க' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுடைய குணமும் - குடிப்பிறப்பும் - குற்றமும் - குறைவில் லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க,
(என்றவாறு). இவையெல்லாம் ஒத்தனவாயின், உறவு நீளச் செல்லுமென்றவாறாம்.
794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு

Who, born of noble race, from guilt would shrink with shame,
Pay any price so you as friend that man may claim.

உயர்ந்த குடியில்‌ பிறந்து, தன்னிடத்தில்‌ வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப்‌ பொருள்‌ கொடுத்தாவது நட்புக்‌ கொள்ளவேண்டும்‌.

The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, isworth even purchasing.

பரிமேலழகர் உரை குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை - உயர்ந்த குடியின் கண் பிறந்த தன்மாட்டு உலகர் சொல்லும் பழிக்கஞ்சுவானை; கொடுத்தும் நட்புக் கொளல் வேண்டும் - சில கொடுத்தாயினும் நட்புக் கோடல் சிறந்தது.
விளக்கம்:
(குடிப்பிறப்பால் தான் பிழை செய்யாமையும், பழியை அஞ்சலான் பிழைத்தன பொறுத்தலும் பெற்றாம்; இவை இரண்டும் உடையானைப் பெறுதல் அருமையின், அவன் நட்பை விலை கொடுத்தும் கொள்க என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து, தன் மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை, அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட் பாகக் கொள்ளல் வேண்டும்,
(என்றவாறு).
795

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்

Make them your chosen friend whose words repentance move,
With power prescription’s path to show, while evil they reprove.

நன்மையில்லாத செயலைக்‌ கண்டபோது வருந்தும்‌ படியாக இடித்துச்‌ சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின்‌ நட்பை ஆராய்ந்து கொள்ளவேண்டும்‌.

You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over acrime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teachyou (the ways of) the world.

பரிமேலழகர் உரை அல்லது அழச்சொல்லி - தாம் உலக வழக்கல்லது செய்யக் கருதின்சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும்; இடித்து - செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும்; வழக்கு அறிய வல்லார் - அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; 'ஆய்ந்து நட்புக் கொளல் - ஆராய்ந்து நட்புக் கொள்க.
விளக்கம்:
('அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியல்லாதனவற்றிற் குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது நட்பை ஆராய்ந்து கொள்க,
(என்றவாறு) இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று.
796

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

Ruin itself one blessing lends:
‘Tis staff that measures out one’s friends.

கேடு வந்தபோதும்‌ ஒருவகை நன்மை உண்டு; அக்கேடு ஒருவனுடைய நண்பரின்‌ இயல்புகளை நீட்டி அளந்து பார்ப்பதொரு கோலாகும்‌.

Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection ofone’s) relations.

பரிமேலழகர் உரை கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு.
விளக்கம்:
(தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பது பற்றிக் கேட்டினைக் கோலாக்கியும், அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர். இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கேடுவந்தவிடத்தும் ஒருபயனுண்டாம்; அக்கேடு நட்டாரது தன்மையை நீட்டி யளந்தறிதற்கு ஒரு கோலமாதலால்,
(என்றவாறு). மேல் கெடுங்காலைக்கை விடுவாரை விடவேண்டு மென்றார் அவரை அறியுமா றென்னை யென்றார்க்கு , கேட்டாலல்லது அறிதல் அரிதென்றார்.
797

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

‘Tis gain to any man, the sages say,
Friendship of fools to put away.

ஒருவனுக்கு ஊதியம்‌ என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன்‌ செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக்‌ கைவிடுதலாகும்‌,

It is indead a gain for one to renounce the friendship of fools.

பரிமேலழகர் உரை ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஓரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல்.
விளக்கம்:
நட்பு ஒழிந்தாலும், நீங்காக்கால் "வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே"§மாறுபோலத் தீங்கு வருதலின், 'விடல்' என்றும், நீங்கியவழித் தீங்கு ஒழிதலேயன்றி இருமையின்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின் அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.
விளக்கம்:
(நாலடி. 180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது அறிவில்லாதா ரோடு நட்பாடுதலை நீங்க வ. தேல்,
(என்றவாறு) இது பேதையார் நட்பைத் தவிர்கவென்றது.
798

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

Think not the thoughts that dwarf the soul; nor take
For friends the men who friends in time of grief forsake.

ஊக்கம்‌ குறைவதற்குக்‌ காரணமான செயல்களை எண்ணாமலிருக்கவேண்டும்‌; அதுபோல்‌ துன்பம்‌ வந்த போது கைவிடுகின்றவரின்‌ நட்பைக்‌ கொள்ளாதிருக்க வேண்டும்‌.

Do not think of things that discourage your mind, nor contract friendship with those who wouldforsake you in adversity.

பரிமேலழகர் உரை உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற் கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக.
விளக்கம்:
(உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தான் சிறு குமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அது போல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது.
799

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்

Of friends deserting us on ruin’s brink,
‘Tis torture e’en in life’s last hour to think.

கேடு வரும்‌ காலத்தில்‌ கைவிட்டு ஒதுங்குகின்றவரின்‌ நட்பு, எமன்‌ கொல்லும்‌ காலத்தில்‌ நினைத்தாலும்‌ நினைத்த உள்ளத்தை வருத்தும்‌.

The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity willburn one’s mind at the time of death.

பரிமேலழகர் உரை கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும், உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும்.
விளக்கம்:
(நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடீதாம் எனக் கைவீடு எண்ணிச் செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்,' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.) --
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல் லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்; அவர் கொல்லு மதனினும், (எ-று) இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.
800

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு

Cling to the friendship of the spotless one’s; whate’er you pay.
Renounce alliance with the men of evil way.

குற்றமற்றவருடைய நட்பைக்‌ கொள்ளவேண்டும்‌: ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக்‌ கொடுத்தாவது கைவிடவேண்டும்‌.

Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of thosewho do not agree (with the world).

பரிமேலழகர் உரை மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக.
விளக்கம்:
(உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயி னும், தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக,
(என்றவாறு)


transliteration

naataathu natdalitr kaetillai natdapin
veetillai natpaal pavarkku

aaindhthaaindhthu kollaathaan kaenmai kataimurai
thaansaam thuyaram tharum

kunamum kutimaiyum kutrramum kunraa
inanum arindhthiyaakka natpu

kutippirandhthu thankan palinaanu vaanaik
koduththum kolalvaendum natpu

alachsolli allathu itiththu valakkariya
vallaarnatpu aaindhthu kolal

kaettinum untohr uruthi kilaignyarai
neetti alappathor koal

oothiyam yenpathu oruvatrkup paethaiyaar
kaenmai oreei vidal

ullatrka ullachiirukuva kollatrka allatrkan
allatrkan aatrraruppaar natpu

kedungkaalaik kaividuvaar kaenmai adungkaalai
ullinum ullanj sudum

maruvuka maachatrraar kaenmaion reeththum
oruvuka oppilaar natpu