குறள் 792

நட்பாராய்தல்

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்

aaindhthaaindhthu kollaathaan kaenmai kataimurai
thaansaam thuyaram tharum


Shuddhananda Bharati

Testing friendship

Friendship made without frequent test
Shall end in grief and death at last.


GU Pope

Investigation in forming Friendships

Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.

The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) todeath.


Mu. Varadarajan

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக்‌ கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில்‌ தான்‌ சாவதற்குக்‌ காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்‌.


Parimelalagar

ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக் கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும்.
விளக்கம்:
('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேல வாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளா தான் கொண்ட நட்பு, பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும், (எ - று ) இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.