The Knowledge of Indications 71

701

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி

Who knows the sign, and reads unuttered thought, the gem is he,
Of earth round traversed by the changeless sea.

ஒருவர்‌ சொல்லாமலே அவருடைய முகத்தை நோக்கி அவர்‌ கருதிய குறிப்பை அறிகின்றவன்‌ எப்போதும்‌ உலகத்திற்கு ஓர்‌ அணிகலன்‌ ஆவான்‌.

The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

பரிமேலழகர் உரை குறிப்பு கூறாமை நோக்கி அறிவான்-அரசனால் குறித்த கருமத்தை அவன் கூறவேண்டா வகை அவன் முகத்தானும் கண்ணானும் நோக்கி அறியும் அமைச்சன்; எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி-எஞ்ஞான்றும் வற்றாத நீரால் சூழப்பட்ட வையத்துள்ளார்க்கு ஓர் ஆபரணமாம்
விளக்கம்:
(ஒட்பமுடையனாய் எல்லார்க்கும் அழகுசெய்தலான். 'வையக்கு அணி' என்றார். குறிப்பும் வையமும் ஆகுபெயர். வையத்திற்கு என்பது விகாரப்பட்டு நின்றது.)
மணக்குடவர் உரை குறிப்பறிதலாவது அரசர் உள்ளக் கருத்தை அமைச்சர் அறிதல். இஃது அமைச்சியலாதலின் அமைச்சர் குறிப்பறிதல் கூறிய தென்னையெனின், குறிப் பறிதல் அரசர்க்கும் வேண்டுமாதலின், இறந்தது காத்தலென்னுந் தந்திரத்தியாற் கூறப்பட்ட தென்க. இது பெரும்பான்மையும் அரசர்க்கும் வேண்டுமாதலின், மன்னரைச் சேர்ந்தொழுகலின் பின் கூறப்பட்டது, (இதன் பொருள்) அரசன் மனநிகழ்ச்சியை அவன் கூறுவதன் முன்னே நோக்கி அறியுமவன், எல்லா நாளும் மாறாநீர் சூழ்ந்த வையத்துக்கு அணிகலனாவன். இது மக்களிற் சிறப்புடையனா மென்றது.
702

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

Undoubting, who the minds of men can scan,
As deity regard that gifted man.

ஐயப்படாமல்‌ மனத்தில்‌ உள்ளதை உணரவல்லவனை (அவன்‌ மனிதனே ஆனாலும்‌) தெய்வத்தோடு ஒப்பாகக்‌ கொள்ள வேண்டும்‌.

He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one’s mind).

பரிமேலழகர் உரை அகத்தது ஐயப்படாது உணர்வானை-ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை தெய்வத்தொடு ஒப்பக்கொளல்-மகனேயாயினும், தெய்வத்தொடு ஒப்ப நன்கு மதிக்க.
விளக்கம்:
(உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடு ஒப்ப' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல் லாரை, தேவரோடு ஒப்பக் கொள்க, (எ - று )
703

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்

Who by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain.

(முகம்‌ கண்‌ இவற்றின்‌) குறிப்புக்களால்‌ உள்ளக்‌ குறிப்பை உணர வல்லவரை நாட்டின்‌ உறுப்புக்களுள்‌ எதைக்‌ கொடுத்தாவ ணையாகப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌.

The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.

பரிமேலழகர் உரை குறிப்பின் குறிப்பு உணர்வாரை-தம் குறிப்பு நிகழுமாறு அறிந்து அதனால் பிறர் குறிப்பறியும் தன்மையாரை; உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்-அரசர் தம் உறுப்புக்களுள் அவர் வேண்டுவதொன்றனைக் கொடுத்தாயினும் தமக்குத் துணையாகக் கொள்க.
விளக்கம்:
(உள் நிகழும் நெறி யாவர்க்கும் ஒத்தலின், பிறர் குறிப்பறிதற்குத் தம் குறிப்புக் கருவியாயிற்று. உறுப்புக்களாவன: பொருளும், நாடும், யானை குதிரைகளும் முதலிய புறத்து உறுப்புக்கள். இதற்குப் 'பிறர் முகக் குறிப்பானே அவர் மனக்குறிப்பு உணர்வாரை' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் குறிப்பு அறிவாரது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர்களை , உறுப் பினுள் அவர் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்து, துணையாகக் கூட்டிக் கொள்க,
(என்றவாறு). உறுப்பினுள் என்பதற்குத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனவும் அமையும்.
704

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு

Who reads what’s shown by signs, though words unspoken be,
In form may seem as other men, in function nobler far is he.

ஒருவன்‌ மனத்தில்‌ கருதியதை அவன்‌ கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர்‌ உறுப்பால்‌ ஒத்தவராக இருந்தாலும்‌ அறிவால்‌ வேறுபட்டவர்‌ ஆவர்‌.

Those who understand one’s thoughts without being informed (thereof) and those who do not, may(indeed) resemble one another bodily; still are they different (mentally).

பரிமேலழகர் உரை குறித்தது கூறாமைக் கொள்வாரொடு - ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர்-மற்று மாட்டாதால் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு-அறிவான் வேறு.
விளக்கம்:
('கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றை யார் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையர். இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.
705

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்

By sign who knows not sings to comprehend, what gain,
‘Mid all his members, from his eyes does he obtain?

(முகம்‌ கண்‌ இவற்றின்‌) குறிப்புக்களால்‌ உள்ளக்‌ குறிப்பை உணராவிட்டால்‌, ஒருவனுடைய உறுப்புக்களுள்‌ கண்கள்‌ என்ன பயன்படும்‌?

Of what use are the eyes amongst one’s members, if they cannot by their own indications dive those of another ?.

பரிமேலழகர் உரை குறிப்பின் குறிப்பு உணரா ஆயின்-குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ-ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன?
விளக்கம்:
(முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப் பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது; அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் முகக்குறிப்பினானே அவனவன் மனக்குறிப்பை யறிய மாட்டாவாயின், தன்னுறுப்புக்களுடன் கண்கள் மற்றென்ன பயனைத் தருமோ? இது குறிப்பறியாதார் குருடரோடு ஒப்பா ரென்றது.
706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

As forms around in crystal mirrored clear we find,
The face will show what’s throbbing in the mind.

தன்னை அடுத்த பொருளைத்‌ தன்னிடம்‌ காட்டும்‌ பளிங்கு போல்‌. ஒருவனுடைய நெஞ்சத்தில்‌ மிகுந்துள்ளதை அவனுடைய முகம்‌ காட்டும்‌

As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.

பரிமேலழகர் உரை அடுத்தது காட்டும் பளிங்கு போல்-தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்-ஒருவன் நெஞசத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும்.
விளக்கம்:
('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற்பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல, நெஞ்சத்து மிக்க தனை முகம் காட்டும், (எ - று. இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும், மகிழ்ச்சியுண்டா யின் மலர்ந்தும், காட்டு மென்றது.
707

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்

Than speaking countenance hath aught more prescient skill?
Rejoice or burn with rage, ‘tis the first herald still!

ஒருவன்‌ விருப்பம்‌ கொண்டாலும்‌ வெறுப்புக்‌ கொண்டாலும்‌, அவனுடைய முகம்‌ முற்பட்டு அதைத்‌ தெரிவிக்கும்‌; அம்‌ முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ?

Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is)pleased or vexed.

பரிமேலழகர் உரை உவப்பினும் காயினும் தான் முந்துறும்-உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ-முகம் போல அறிவு மிக்கது பிறிது உண்டோ? இல்லை.
விளக்கம்:
('உயிர்க்கே அறிவுள்ளது; ஐம்பூதங்களான் இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருதியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முகம் போல் முதிர்ந்த அறிவுடையது பிறிதுண்டோ ? ஒருவனை உவப்பினும் வெறுப்பினும் தான் முற்பட்டுக் காட்டும், (எ - று ). குறிப்பறியுமாறு என்னை யென்றார்க்கு, இது முகம் அறிவிக்குமென்றது.
708

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்

To see the face is quite enough, in presence brought,
When men can look within and know the lurking thought.

உள்ளக்‌ குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப்‌ பெற்றால்‌,(அவரிடம்‌ எதையும்‌ கூறாமல்‌) அவருடைய முகத்தை நோக்கி நின்றால்‌ போதும்‌.

If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred(to him) it is enough that he stand looking at their face.

பரிமேலழகர் உரை அகம் நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின்-குறையுறுவானும் தன் மனத்தைக் குறிப்பான் அறிந்து தானுற்ற அதனைத் தீர்ப்பாரைப் பெறின்; முகம் நோக்கி நிற்க அமையும்-அவர் தன் முகம் நோக்கி அவ்வெல்லைக்கண் நிற்க அமையும்.
விளக்கம்:
('உணர்வார்' எனக் காரியத்தைக் காரணமாக்கிக் கூறினார். அவ்வெல்லையைக் கடந்து சொல்லுமாயின் இருவர்க்குஞ் சிறுமையாமாகலின், அது வேண்டா என்பதாம். குறையுறுவான் இறல்பு கூறுவார் போன்று கருவி கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் குறிப்பறிதற் கருவி முகம் என்பது கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முகத்தை நோக்கி நிற்க, அமையும் ; தன் மனத்தை நோக்கி அறி யலுற்றதனை அறியவல்லாரைப் பெறின்,
(என்றவாறு). இஃது அமாத்தியர் குறிப்பை அரசனும் அறியவேண்டுமென்றது.
709

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்

The eye speaks out the hate or friendly soul of man;
To those who know the eye’s swift varying moods to scan.

கண்பார்வையின்‌ வேறுபாடுகளை உணரவல்லவரைப்‌ பெற்றால்‌, (ஒருவனுடைய மனத்தில்‌ உள்ள) பகையையும்‌ நட்பையும்‌ அவனுடைய கண்களே சொல்லிவிடும்‌.

If aking gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will(themselves) reveal (to him) their hatred or friendship.

பரிமேலழகர் உரை கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்-வேந்தர் தம் நோக்கு வேறுபாட்டின் தன்மையை அறியவல்ல அமைச்சரைப் பெறின்; பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்-அவர்க்கு மனத்துக் கிடந்த பகைமையையும் ஏனைக் கேண்மையையும் வேற்று வேந்தர் சொல்லிற்றிலராயினும், அவர் கண்களே சொல்லும்.
விளக்கம்:
(இறுதிக்கண் 'கண்' ஆகுபெயர். நோக்கு வேறுபாடாவன; வெறுத்த நோக்கமும், உவந்த நோக்கமும். உணர்தல்: அவற்றை அவ்வக்குறிகளான் அறிதல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவனோடுள்ள பகைமையையும் நட்பையும் கண்கள் சொல் லும்; கண்ணினது வேறுபாட்டை யறிவாரைப் பெறின்,
(என்றவாறு). இது கண் கண்டு குறிப்பறிதல் நுண்ணியார்க்கல்லது பிறர்க்கரிதென்றது.
710

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற

The men of keen discerning soul no other test apply
(When you their secret ask) than man’s revealing eye.

யாம்‌ நுட்பமான அறிவுடையேம்‌ என்று பிறர்‌ கருத்தை அறிபவரின்‌ அளக்குங்கோல்‌, ஆராய்ந்து பார்த்தால்‌ அவருடைய கண்களே அல்லாமல்‌ வேறு இல்லை.

The measuring-rod of those (ministers) who say “we are acute” will on inquiry be found to be their(own) eyes and nothing else.

பரிமேலழகர் உரை நுண்ணியம் என்பார் அளக்கும் கோல்-யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை-ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.
விளக்கம்:
(அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது 'கண்' என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது சருத்தாக்குவாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருக்கும் அமைச்சர் பிறரை அளக்குங் கோலாவது ஆராயுமிடத்து, அவர் கண்ணல்லது பிற இல்லை.


transliteration

kooraamai nokkik kuripparivaan yenjgnyaanrum
maaraaneer vaiyak kani

aiyap pataaathu akaththathu unarvaanaith
thaeivaththo doppak kolal

kurippitr kurippunar vaarai uruppinul
yaathu koduththum kolal

kuriththathu kooraamaik kolvaaroa taenai
uruppo ranaiyaraal vaeru

kurippitr kurippunaraa vaayin uruppinul
yenna payaththavo kan

aduththathu kaatdum palingkupol naenjcham
kaduththathu kaatdum mukam

mukaththin muthukkuraindhthathu untoh uvappinum
kaayinum thaanmundh thurum

mukamnokki nitrka amaiyum akamnokki
utrra thunarvaarp paerin

pakaimaiyum kaenmaiyum kannuraikkum kannin
vakaimai unarvaarp paerin

nunniyam yenpaar alakkungkoal kaanungkaal
kannallathu illai pira