குறள் 710

குறிப்பறிதல்

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற

nunniyam yenpaar alakkungkoal kaanungkaal
kannallathu illai pira


Shuddhananda Bharati

Divining the mind

The scale of keen discerning minds
Is eye and eye that secrets finds.


GU Pope

The Knowledge of Indications

The men of keen discerning soul no other test apply
(When you their secret ask) than man's revealing eye.

The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their(own) eyes and nothing else.


Mu. Varadarajan

யாம்‌ நுட்பமான அறிவுடையேம்‌ என்று பிறர்‌ கருத்தை அறிபவரின்‌ அளக்குங்கோல்‌, ஆராய்ந்து பார்த்தால்‌ அவருடைய கண்களே அல்லாமல்‌ வேறு இல்லை.


Parimelalagar

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல்-யாம் நுண்ணறிவு உடையேம் என்றிருக்கும் அமைச்சர் அரசர் கருத்தினை அளக்குங் கோலாவது; காணுங்கால் கண் அல்லது பிற இல்லை-ஆராயுமிடத்து அவர் கண்ணல்லது பிற இல்லை.
விளக்கம்:
(அறிவின் உண்மை அஃதுடையார்மேல் ஏற்றப்பட்டது. இங்கிதம், வடிவு, தொழில், சொல் என்பன முதலாகப் பிறர் கருத்தளக்கும் அளவைகள் பல. அவையெல்லாம் முன் அறிந்த வழி அவரான் மறைக்கப்படும்; நோக்கம் மனத்தோடு கலத்தலான் ஆண்டு மறைக்கப்படாது என்பது பற்றி அதனையே பிரித்துக் கூறினார். இனி 'அலைக்குங்கோல்' என்று பாடம் ஓதி, 'நுண்ணியம்' என்று இருக்கும் அமைச்சரை அரசரலைக்குங் கோலாவது 'கண்' என உரைத்து, தன் வெகுளி நோக்கால் அவர் வெகுடற்குறிப்பு அறிக என்பது சருத்தாக்குவாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நுண்கருவி நோக்கு என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) யாம் நுண்ணிய அறிவையுடையே மென்றிருக்கும் அமைச்சர் பிறரை அளக்குங் கோலாவது ஆராயுமிடத்து, அவர் கண்ணல்லது பிற இல்லை.