Conduct in the Presence of the King 70

691

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

Who warm them at the fire draw not too near, nor keep too much aloof;
Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.

அரசரைச்‌ சார்ந்து வாழ்கின்றவர்‌, அவரை மிக நீங்காமலும்‌, மிக அணுகாமலும்‌ நெருப்பில்‌ குளிர்‌ காய்கின்றவர்போல இருக்க வேண்டும்‌.

Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.

பரிமேலழகர் உரை இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - மாறுபாடுதலையுடைய அரசரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.
விளக்கம்:
[கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல் வேந்தர்' என்றார். மிக அகலின் பயன் கெடாது, மிக அணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.]
மணக்குடவர் உரை மன்னரைச் சேர்ந்தொழுகலாவது அரசர் மாட்டு அமாத்தியர் ஒழுகுந்திறங் கூறுதல். இது முதலாக அவையஞ்சாமை ஈறாகக் கூறுகின்றவை தம்மரசர் மாட்டு வேண்டுமாயினும், மாற்றரசர்மாட்டும் வேண்டுதல் இன்றியமையாத சிறப்புடைத்தாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர், அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல் இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.
692

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்

To those who prize not state that kings are wont to prize,
The king himself abundant wealth supplies.

அரசர்‌ விரும்புகின்றவைகளைத்‌ தாம்‌ விரும்பாமலிருத்தல்‌ (அரசரைச்‌ சார்ந்திருப்பவர்க்கு) அரசரால்‌ நிலையான ஆக்கத்தைப்‌ பெற்றுத்‌ தரும்‌.

For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

பரிமேலழகர் உரை மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.
விளக்கம்:
[ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேம்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து, அவர் தாமே எல்லாச் செல்வமும் நல்குவர் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி, மன்னரால் விரும்பப்பட்டவையிற்றை விரும்பாதொழிக; அவ்விரும்பாமை, அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான்,
(என்றவாறு). அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத் தவிர் தல் வேண்டு மென்றது.
693

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

Who would walk warily, let him of greater faults beware;
To clear suspicions once aroused is an achievement rare.

(அரசரைச்‌ சார்ந்தவர்‌) தம்மைக்‌ காத்துக்கொள்ள விரும்பினால்‌, அரிய தவறுகள்‌ நேராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌; ஐயுற்றபின்‌ அரசரைத்‌ தெளிவித்தல்‌ எவர்க்கும்‌ முடியாது.

Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if theking’s suspicion is once roused, no one can remove it.

பரிமேலழகர் உரை போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.
விளக்கம்:
[அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக; ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது, (எ - று. இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டுமென்றது.
694

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து

All whispered words and interchange of smiles repress,
In presence of the men who kingly power possess.

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில்‌, (மற்றொருவன்‌) செவியை நெருங்கிச்‌ சொல்லுதலும்‌ உடன்‌ சேர்ந்து நகைத்தலும்‌ செய்யாமல்‌ ஒழுக வேண்டும்‌.

While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.

பரிமேலழகர் உரை ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக.
விளக்கம்:
[சேர்தல்:பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம் மில் நகுதலும், தவிர்ந்தொழுகல் வேண்டும். (எ-று). இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.
695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை

Seek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear!

(அரசர்‌ மறைப்பொருள்‌ பேசும்போது எப்பொருளையும்‌ உற்றுக்கேட்காமல்‌, தொடர்ந்து வினவாமல்‌, அப்பொருளை அவரே விட்டுச்‌ சொன்னபோது கேட்டறிய வேண்டும்‌.

(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear

பரிமேலழகர் உரை மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கோளாது; தொடரார்- அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன்தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க.
விளக்கம்:
['ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால் பின்பு கேட்க,
(என்றவாறு). இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.
696

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்

Knowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare.

அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர்‌ நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும்‌ விருப்பமானவற்றையும்‌ அவர்‌ விரும்புமாறு சொல்ல வேண்டும்‌.

Knowing the (king’s disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.

பரிமேலழகர் உரை குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி - சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக.
விளக்கம்:
[குறிப்புக் காரியத்தின் கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனிற்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேண்டாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அரசன் குறிப்பறிந்து, காலம் பார்த்து, வெறுப்பில்லாதன வாய், சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க,
(என்றவாறு). இது சொல்லுந் திறம் கூறிற்று.
697

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

Speak pleasant things, but never utter idle word;
Not though by monarch’s ears with pleasure heard.

அரசர்‌ விரும்புகின்றவற்றை மட்டும்‌ சொல்லிப்‌ பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும்‌ எப்போதும்‌ சொல்லாமல்‌ விட வேண்டும்‌.

Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions,though requested (to do so).

பரிமேலழகர் உரை வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.
விளக்கம்:
['வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள் வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை' என்றும், வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்' என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும் வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இ ள்.) எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லி, தமக்குப் பயன்படாதனவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக,
(என்றவாறு). சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப்படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினாவினால், நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை.
698

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்

Say not, ‘He’s young, my kinsman,’ despising thus your king;
But reverence the glory kingly state doth bring.

(அரசனை) “எமக்கு இளையவர்‌; எமக்கு இன்ன முறை உடையவர்‌” என்று இகழாமல்‌ அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன்‌ பொருந்த நடக்க வேண்டும்‌.

Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, “He is our junior (in age) and connected with our family!”.

பரிமேலழகர் உரை இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும். அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்.
விளக்கம்:
[ஒளி; உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இவர் நமக்கு இளையரன்றும் இத் தன்மையாகிய முறைய ரென்றும் இகழாது, அவர் பெற்று நின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்,
(என்றவாறு).
699

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்

“We’ve gained his grace, boots nought what graceless acts we do’,
So deem not sages who the changeless vision view.

அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர்‌, யாம்‌ அரசரால்‌ விரும்பப்பட்டோம்‌’ என்று எண்ணி அவர்‌ விரும்பாதவற்றைச்‌ செய்யமாட்டார்‌.

Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (withinthemselves) “We are esteemed by the king”.

பரிமேலழகர் உரை கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலை பெற்ற அறிவினையுடையார்.
விளக்கம்:
[கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், ன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோ மென்று நினைத்து, அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தெளிவுடையார்,
(என்றவாறு) இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது.
700

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்

Who think ‘We’re ancient friends’ and do unseemly things;
To these familiarity sure ruin brings.

“யாம்‌ அரசர்க்குப்‌ பழைமையானவராய்‌ உள்ளோம்‌ எனக்‌ கருதித்‌ தகுதி அல்லாதவற்றைச்‌ செய்யும்‌ உரிமை கேட்டைத்‌ தரும்‌.

The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity(with the king) will ensure his ruin.

பரிமேலழகர் உரை பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும்.
விளக்கம்:
[அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாம் பழைமையுடையோ மென்று கருதி, இயல்பல்லாதன வற்றைச் செய்யும் நட்பின் தகைமை, தமக்குக் கேட்டைத்தரும்,
(என்றவாறு) இது பின் பகையாவனவற்றைத் தவிரல் வேண்டுமென்றது.


transliteration

akalaathu anukaathu theekkaaivaar polka
ikalvaendhtharch saerndhtholuku vaar

mannar vilaipa vilaiyaamai mannaraal
manniya aakkandh tharum

potrrin ariyavai potrral kaduththapin
thaetrruthal yaarkkum arithu

sevichsollum saerndhtha nakaiyum aviththolukal
aanra paeriyaa rakaththu

yepporulum oaraar thodaraarmatr rapporulai
vitdakkaal kaetka marai

kuripparindhthu kaalang karuthi vaeruppila
vaendupa vaetpach solal

vaetpana solli vinaiyila yenjgnyaanrum
kaetpinum sollaa vidal

ilaiyar inamuraiyar yenrikalaar ninra
oliyodu olukap padum

kolappattaem yenraennik kollaatha seiyaar
thulakkatrra kaachi yavar

palaiyam yenakkaruthip panpalla seiyum
keluthakaimai kaedu tharum