குறள் 693

மன்னரைச் சேர்ந்தொழுதல்

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

potrrin ariyavai potrral kaduththapin
thaetrruthal yaarkkum arithu


Shuddhananda Bharati

Walk with kings

Guard thyself from petty excess
Suspected least, there's no redress.


GU Pope

Conduct in the Presence of the King

Who would walk warily, let him of greater faults beware;
To clear suspicions once aroused is an achievement rare.

Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if theking's suspicion is once roused, no one can remove it.


Mu. Varadarajan

(அரசரைச்‌ சார்ந்தவர்‌) தம்மைக்‌ காத்துக்கொள்ள விரும்பினால்‌, அரிய தவறுகள்‌ நேராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌; ஐயுற்றபின்‌ அரசரைத்‌ தெளிவித்தல்‌ எவர்க்கும்‌ முடியாது.


Parimelalagar

போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது - அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.
விளக்கம்:
[அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள் வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக் காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக; ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது, (எ - று. இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டுமென்றது.