குறள் 692

மன்னரைச் சேர்ந்தொழுதல்

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்

mannar vilaipa vilaiyaamai mannaraal
manniya aakkandh tharum


Shuddhananda Bharati

Walk with kings

Crave not for things which kings desire
This brings thee their fruitful favour.


GU Pope

Conduct in the Presence of the King

To those who prize not state that kings are wont to prize,
The king himself abundant wealth supplies.

For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.


Mu. Varadarajan

அரசர்‌ விரும்புகின்றவைகளைத்‌ தாம்‌ விரும்பாமலிருத்தல்‌ (அரசரைச்‌ சார்ந்திருப்பவர்க்கு) அரசரால்‌ நிலையான ஆக்கத்தைப்‌ பெற்றுத்‌ தரும்‌.


Parimelalagar

மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்; மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.
விளக்கம்:
[ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை, மேம்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம் நோக்கி உவந்து, அவர் தாமே எல்லாச் செல்வமும் நல்குவர் என்பது கருத்து. எனவே, அவற்றை விரும்பின் கேடு தரும் என்பதாம்.]


Manakkudavar

(இதன் பொருள்) எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி, மன்னரால் விரும்பப்பட்டவையிற்றை விரும்பாதொழிக; அவ்விரும்பாமை, அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான்,
(என்றவாறு). அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத் தவிர் தல் வேண்டு மென்றது.