Absence of ‘Terrorism’ 57

561

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.

செய்த குற்றத்தைத்‌ தக்கவாறு ஆராய்ந்து மீண்டும்‌ அக்‌ குற்றம்‌ செய்யாதபடி குற்றத்திற்குப்‌ பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன்‌ ஆவான்‌.

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice),suitably punishes it, so that it may not be again committed.

பரிமேலழகர் உரை தக்காங்கு நாடி-ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாக நின்று ஆராய்ந்து தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து-பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
விளக்கம்:
['தக்காங்கு', 'ஒத்தாங்கு' என்பன ஒரு சொல். தகுதி என்பது நடுவுநிலைமையாதல் "தகுதி என ஒன்றும் நன்றே" (குறள். 111) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.]
மணக்குடவர் உரை வெருவந்த செய்யாரையாவது பிறர்க்கு ஐயம் வருவன செய்யாமையும், தனக்கு அச்சம் வருவன செய்யாமையும் கூறுதல். தான் முறைசெய்வாரைப் போன்றிருந்து அதனை உலகத்தார் வெருவுமாறு செய்வனாயின், அதுவுங் கொடுங் கோலோடு ஒக்குமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமைக் காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்,
(என்றவாறு).
562

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்

For length of days with still increasing joys on Heav’n who call,
Should raise the rod with brow severe, but let it gently fall.

ஆக்கம்‌ நெடுங்காலம்‌ நீங்காமலிருக்க விரும்புகின்றவர்‌ (தண்டிக்கத்‌ தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல்‌ காட்டி, அளவு மீறாமல்‌ முறை செய்ய வேண்டும்‌.

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquireswith strictness, and then punish with mildness.

பரிமேலழகர் உரை கடிதுஓச்சி-அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி; மெல்ல எறிக-செய்யுங்கால் அளவிறவாமல் செய்க; ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர்-ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
விளக்கம்:
(கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கடி தாகச் செய்வாரைப்போன்று மெல்லிதாகச் செய்க, நெடி தாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார்,
(என்றவாறு). இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.
563

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.

குடிகள்‌ அஞ்சும்படியான கொடுமைகளைச்‌ செய்து ஆளும்‌ கொடுங்கோல்‌ அரசனானால்‌, அவன்‌ திண்ணமாக விரைவில்‌ கெடுவான்‌.

The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come toruin.

பரிமேலழகர் உரை வெருவந்த செய்து ஒழுகும் செங்கோலன் ஆயின்-குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும்-அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
விளக்கம்:
(வெங்கோலன்' என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒரு பொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலை யுடையனாயின், அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்,
(என்றவாறு)
564

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்

‘Ah! cruel is our king’, where subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay.

‘நம்‌ அரசன்‌ கடுமையானவன்‌ என்று குடிகளால்‌ கூறப்படும்‌ கொடுஞ்‌ சொல்லை உடைய வேந்தன்‌, தன்‌ ஆயுள்‌ குறைந்து விரைவில்‌ கெடுவான்‌.

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

பரிமேலழகர் உரை இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்-குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன்; உறை கடுகி ஒல்லைக் கெடும்-ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.
விளக்கம்:
(நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது; அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன், தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும்,
(என்றவாறு) இது நாடும் தான் உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவ னென்றது.
565

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon’s glance.

எளிதில்‌ காணமுடியாத அருமையும்‌, இனிமையற்ற முகமும்‌ உடையவனது பெரிய செல்வம்‌, பேய்‌ கண்டு காத்திருப்பதைப்‌ போன்ற தன்மையுடையது.

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is likethat which has been obtained by a devil.

பரிமேலழகர் உரை அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்-தன்னைக் காணவேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினை யுடையானது பெரிய செல்வம்; பேய் கண்டன்னது உடைத்து- பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.
விளக்கம்:
(எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின. இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பதுபற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவர் னது பெரிய செல்வம் பேயைக்கண்ட தொக்க அச்சந்தருதலுடைத்து, (எ-று). இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேராதென்றது.
566

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்

The tyrant, harsh in speach and hard of eye,
His ample joy, swift fading, soon shall die.

கடுஞ்சொல்‌ உடையவனாய்க்‌ கண்ணோட்டம்‌ இல்லாதவனாய்‌ உள்ளவனுடைய பெரிய செல்வம்‌ நீட்டித்தல்‌ இல்லாமல்‌ அப்பொழுதே கெடும்‌.

The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, willinstantly perish instead of abiding long, with him.

பரிமேலழகர் உரை கடுஞ் சொல்லன் கண்இலன் ஆயின்-அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்; நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும்-அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.
விளக்கம்:
("வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு" எனப்பட்ட விதனங்களுள், கடுஞ்சொல்லையும் மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர். இவை செய்தபொழுதே கெடுஞ்சிறுமைத்து அன்றாயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் , கண்ணோட்டமும் இலனாயின், அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும்,
(என்றவாறு). இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.
567

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்

Harsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch’s conquering might.

கடுமையான சொல்லும்‌ முறைகடந்த தண்டனையும்‌ அரசனுடைய வெற்றிக்குக்‌ காரணமான வலிமையைத்‌ தேய்க்கும்‌ அரம்‌ ஆகும்‌.

Severe words and excessive punishments will be a file to waste away a king’s power for destroying(his enemies).

பரிமேலழகர் உரை கடுமொழியும் கையிகந்த தண்டமும்-கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்; வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்-அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
விளக்கம்:
(கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவை ஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற்சொல்லல், கை இகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதுஉம், இவை செய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம்,
(என்றவாறு). இது வலியைக் கெடுக்கும் என்றது.
568

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு

Who leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o’er!

அமைச்சர்‌ முதலான தன்‌ இனத்தாரிடம்‌ கலந்து எண்ணாத அரசன்‌, சினத்தின்‌ வழியில்‌ சென்று சீறி நிற்பானானால்‌, அவனுடைய செல்வம்‌ சுருங்கும்‌.

The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commitsthem to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.

பரிமேலழகர் உரை இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன்-காரியத்தைப் பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்; சினத்து ஆற்றிச் சீறின்-அப் பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித் தன்னைச் சினமாகிய குற்றத்தின்கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின்; திருச் சிறுகும்-அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும்.
விளக்கம்:
(அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின் பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர்; நீங்கவே, அப்பிழைப்புத் தீருமாறும் அப் பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்' என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன் கடிய சொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின், அவனது செல்வம் நாடோறும் சுருங்கும்,
(என்றவாறு) ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின், அவன் செல்வம் குறையும் மென்றவாறு. இனம் - மந்திரி புரோகிதர்.
569

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.

முன்னமே தக்கவாறு அரண்‌ செய்துகொள்ளாத அரசன்‌ போர்‌ வந்த காலத்தில்‌ (தற்காப்பு இல்லாமல்‌) அஞ்சி விரைவில்‌ அழிவான்‌.

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized withfear and quickly perish.

பரிமேலழகர் உரை செரு வந்த போழ்தில், சிறை செய்யா வேந்தன், வெருவந்து, வெய்து கெடும். சிறை செய்யா வேந்தன்-செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண் செய்துகொள்ளாத அரசன்; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும்.
விளக்கம்:
(பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவிச் அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால்தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந் தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிது கெடும்,
(என்றவாறு). இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.
570

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை

Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத்‌ தனக்கு அரணாகச்‌ சேர்த்துக்கொள்ளும்‌; அது தவிர நிலத்திற்குச்‌ சுமை வேறு இல்லை.

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).

பரிமேலழகர் உரை கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும்-கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை-அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை.
விளக்கம்:
('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று 'அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறை அது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்த செய்தலின் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக்கொள்ளும், அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை,
(என்றவாறு).


transliteration

thakkaangku naatith thalaichsellaa vannaththaal
oththaangku oruppathu vaendhthu

katithochi maella yerika naetithaakkam
neengkaamai vaendu pavar

vaeruvandhtha seitholukum vaengkoala naayin
oruvandhtham ollaik kedum

iraikatiyan yenruraikkum innaachsol vaendhthan
uraikaduki ollaik kedum

arunjsevvi innaa mukaththaan paerunjselvam
paeyeikan dannathu utaiththu

kadunjsollan kannilan aayin naedunjselvam
neetinri aangkae kedum

kadumoliyum kaiyikandhtha thandamum vaendhthan
adumuran thaeikkum aram

inaththaatrri yennaatha vaendhthachiinaththaatrrich seerichiirukum
vaendhthachiinaththaatrrich seerichiirukum thiru

seruvandhtha polthichiiraiseiyaa vaendhthan vaeruvandhthu
vaeruvandhthu vaeithu kedum

kallaarp pinikkum kadungkoal athuvallathu
illai nilakkup porai