குறள் 570

வெருவந்தசெய்யாமை

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை

kallaarp pinikkum kadungkoal athuvallathu
illai nilakkup porai


Shuddhananda Bharati

Avoiding terrorism

The crushing burden borne by earth
Is tyrants bound to fools uncouth.


GU Pope

Absence of 'Terrorism'

Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).


Mu. Varadarajan

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத்‌ தனக்கு அரணாகச்‌ சேர்த்துக்கொள்ளும்‌; அது தவிர நிலத்திற்குச்‌ சுமை வேறு இல்லை.


Parimelalagar

கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும்-கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை-அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை.
விளக்கம்:
('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று 'அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறை அது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்த செய்தலின் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக்கொள்ளும், அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை,
(என்றவாறு).