குறள் 569

வெருவந்தசெய்யாமை

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

seruvandhtha polthichiiraiseiyaa vaendhthan vaeruvandhthu
vaeruvandhthu vaeithu kedum


Shuddhananda Bharati

Avoiding terrorism

The king who builds not fort betimes
Fears his foes in wars and dies.


GU Pope

Absence of 'Terrorism'

Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear and swiftly die.

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized withfear and quickly perish.


Mu. Varadarajan

முன்னமே தக்கவாறு அரண்‌ செய்துகொள்ளாத அரசன்‌ போர்‌ வந்த காலத்தில்‌ (தற்காப்பு இல்லாமல்‌) அஞ்சி விரைவில்‌ அழிவான்‌.


Parimelalagar

செரு வந்த போழ்தில், சிறை செய்யா வேந்தன், வெருவந்து, வெய்து கெடும். சிறை செய்யா வேந்தன்-செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண் செய்துகொள்ளாத அரசன்; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும்.
விளக்கம்:
(பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவிச் அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால்தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந் தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிது கெடும்,
(என்றவாறு). இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.