Hearing 42

411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை

Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.

செவியால்‌ கேட்டறியும்‌ செல்வம்‌, செல்வங்களுள்‌ ஒன்றாகப்‌ போற்றப்படும்‌ செல்வமாகும்‌; அச்‌ செல்வம்‌ செல்வங்கள்‌ எல்லாவற்றிலும்‌ தலையானதாகும்‌.

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

பரிமேலழகர் உரை செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான்.
விளக்கம்:
(செவியான் வரும் செல்வம் - கேள்வியால் - எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை கேள்வியாவது கேள்வியாமாறும் அதனானாகிய பயனும் கூறுதல். நூல்களைக் கற்கமாட்டாதார் அவற்றைக் கற்றார்மாட்டுக் கேட்டலும் அறிவுக்குக் காரணமா . மென்பதனால், அதன்பின் இது கூறப்பட்டது. ஒருவற்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வருஞ் செல்வம்: அச்செல்வம் பிறசெல்வங்க ளெல்லாவற்றினும் தலையாகலான்.
412

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்

When ‘tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body’s need.

செவிக்குக்‌ கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத்‌ துணையாக உடலை ஓம்புமாறு வயிற்றுக்கும்‌ சிறிது உணவு தரப்படும்‌.

When there is no food for the ear, give a little also to the stomach.

பரிமேலழகர் உரை செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது; வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
விளக்கம்:
(சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித் தேடல் துன்பமே யன்றி நோயும் காமமும் பெருகுதலான் 'சிறிது' என்றும், அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செவியால் நுகரும் இன்பத்தை யறியாத வாயால் நுகரும் இன் பதையறியும் மாக்கள் செத்தால் வரும் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு ,
(என்றவாறு). இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
413

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து

Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share.

செவியுணவாகிய கேள்வி உடையவர்‌ நிலத்தில்‌ வாழ்கின்றவரே ஆயினும்‌, அவி உணவைக்கொள்ளும்‌ தேவரோடு ஒப்பாவர்‌.

Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, whoenjoy the food of the sacrifices.

பரிமேலழகர் உரை
விளக்கம்:
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார்; நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரொடு ஒப்பர்.
விளக்கம்:
(செவி உணவு: செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண் வந்த இன் சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்' என்றும், துன்பம் அறியாமையான் 'தேவரொடு ஒப்பர்' என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செவிக்கு உணவாகிய கேள்வி யில்லாத போது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும்,
(என்றவாறு). பெருக வுண்ணின் கேள்வியை விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாத லான், சிறிது என்றார். இஃது எல்லாக் காலமும் கேட்க வேண்டு மென்றது.
414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை

Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay.

நூல்களைக்‌ கற்கவில்லையாயினும்‌, கற்றறிந்தவரிடம்‌ கேட்டறிய வேண்டும்‌; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில்‌ தளர்ச்சி வந்தபோது ஊன்றுகோல்போல்‌ துணையாகும்‌.

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be tohim a staff in adversity.

பரிமேலழகர் உரை கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்க; அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணை ஆகலான்.
விளக்கம்:
('உம்மை' கற்க வேண்டும் என்பது பட நின்றது. தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல் இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக் கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம் துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின் னகரம் திரிந்து நின்றது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கற்கமாட்டானாயினுங் கேட்க ; அக்கேள்வி ஒருவன் தளர்ச்சிக் குத் தாங்குவதொரு துணையாம்,
(என்றவாறு). இது கேள்வி வேண்டுமென்றது.
415

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways.

ஒழுக்கமுடைய சான்றோரின்‌ வாய்ச்சொற்கள்‌, வழுக்கல்‌ உடைய சேற்றுநிலத்தில்‌ ஊன்றுகோல்போல்‌ வாழ்க்கையில்‌ உதவும்‌.

The words of the good are like a staff in a slippery place.

பரிமேலழகர் உரை இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று - வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற் சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.
விளக்கம்:
(அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் - தளந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய் சொல்' என்றார். 'வாய்' என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்புணர நினறது. 'அவற்றைக் கேட்க' என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்; ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்,
(என்றவாறு). இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.
416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

Let each man good things learn, for e’en as he
Shall learn, he gains increase of perfect dignity.

எவ்வளவு சிறிதேயாயினும்‌ நல்லவற்றைக்‌ கேட்டறிய வேண்டும்‌; கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத்‌ தரும்‌.

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.

பரிமேலழகர் உரை எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.
விளக்கம்:
('எனைத்து', 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத் துளைபோல வந்து ஈண்டு எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க ; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும், நிரம்பின் பெருமையைத் தரும்,
(என்றவாறு) இஃது எல்லாக் காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்லது கேட்க வேண்டு மென்றது.
417

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்

Not e’en through inadvertence speak they foolish word,
With clear discerning mind who’ve learning’s ample lessons heard.

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர்‌. (ஒருகால்‌ பொருள்களைத்‌) தவறாக உணர்ந்திருந்தாலும்‌ பேதைமையானவற்றைச்‌ சொல்லார்‌.

Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, whohave profoundly studied and diligently listened (to instruction).

பரிமேலழகர் உரை பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்வார் - பிழை உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களை சொல்லார்; இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.
விளக்கம்:
('பிழைப்பு' என்பது திரிந்து நின்றது. பேதைமை: ஆகுபெயர். ஈண்டுதல்: பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தால் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மையாயின் சொல்லார்; ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார்,
(என்றவாறு). இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.
418

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி

Where teaching hath not oped the learner’s ear,
The man may listen, but he scarce can hear.

கேள்வியறிவால்‌ துளைக்கப்படாத செவிகள்‌, (இயற்கையான துளைகள்‌ கொண்டு ஓசையைக்‌) கேட்டறிந்தலும்‌, கேளாத செவிட்டுத்‌ தன்மை உடையனவே.

The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

பரிமேலழகர் உரை கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம். கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.
விளக்கம்:
(ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒசை மாத்திரம் கேட்டனவாயினும், அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி,
(என்றவாறு). இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.
419

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது

‘Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.

நுட்பமான பொருள்களைக்‌ கேட்டறிந்தவர்‌ அல்லாத மற்றவர்‌, வணக்கமான சொற்களைப்‌ பேசும்‌ வாயினை உடையவராக முடியாது.

It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choiceinstruction.

பரிமேலழகர் உரை நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார்; வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.
விளக்கம்:
(கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப் புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நுண்ணிதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற் கூறும் நாவுடையாராதல் இல்லை,
(என்றவாறு) இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.
420

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die, or prosperous live?

செவியால்‌ கேள்விச்சுவை உணராமல்‌ வாயின்‌ சுவையுணர்வு மட்டும்‌ உடைய மக்கள்‌, இறந்தாலும்‌ என்ன? உயிரோடு வாழ்ந்தாலும்‌ என்ன?

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not bythe ear ?

பரிமேலழகர் உரை செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்; அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
விளக்கம்:
(செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருள்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து; பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். 'வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும் கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செவியால் நுகரும் இன்பத்தை யறியாத வாயால் நுகரும் இன் பதையறியும் மாக்கள் செத்தால் வரும் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு ,
(என்றவாறு). இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.


transliteration

selvaththut selvanj sevichselvam achselvam
selvaththu laellaandh thalai

sevukkuna villaatha polthu sirithu
vayitrrukkum eeyap padum

seviyunavitr kaelvi yutaiyaar aviyunavin
aanraaroa doppar nilaththu

katrrila naayinung kaetka akhthoruvatrku
otrkaththin ootrraandh thunai

ilukkal utaiyuli ootrrukkoal atrrae
olukka mutaiyaarvaaich sol

yenaiththaanum nallavai kaetka anaiththaanum
aanra paerumai tharum

pilaiththunarndhthum paethaimai sollaa rilaiththunarndh
theentiya kaelvi yavar

kaetpinung kaelaath thakaiyavae kaelviyaal
thotkap pataatha sevi

nunangkiya kaelviya rallaar vanangkiya
vaayina raathal arithu

seviyitr suvaiyunaraa vaayunarvin maakkal
aviyinum vaalinum yen