குறள் 417

கேள்வி

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்

pilaiththunarndhthum paethaimai sollaa rilaiththunarndh
theentiya kaelvi yavar


Shuddhananda Bharati

Listening

Who listen well and learn sharply
Not ev'n by slip speak foolishly.


GU Pope

Hearing

Not e'en through inadvertence speak they foolish word,
With clear discerning mind who've learning's ample lessons heard.

Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, whohave profoundly studied and diligently listened (to instruction).


Mu. Varadarajan

நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர்‌. (ஒருகால்‌ பொருள்களைத்‌) தவறாக உணர்ந்திருந்தாலும்‌ பேதைமையானவற்றைச்‌ சொல்லார்‌.


Parimelalagar

பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்வார் - பிழை உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களை சொல்லார்; இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.
விளக்கம்:
('பிழைப்பு' என்பது திரிந்து நின்றது. பேதைமை: ஆகுபெயர். ஈண்டுதல்: பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தால் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மையாயின் சொல்லார்; ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார்,
(என்றவாறு). இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.