குறள் 420

கேள்வி

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

seviyitr suvaiyunaraa vaayunarvin maakkal
aviyinum vaalinum yen


Shuddhananda Bharati

Listening

Who taste by mouth and not by ear
What if they fare ill or well here?


GU Pope

Hearing

His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die, or prosperous live?

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not bythe ear ?


Mu. Varadarajan

செவியால்‌ கேள்விச்சுவை உணராமல்‌ வாயின்‌ சுவையுணர்வு மட்டும்‌ உடைய மக்கள்‌, இறந்தாலும்‌ என்ன? உயிரோடு வாழ்ந்தாலும்‌ என்ன?


Parimelalagar

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்; அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
விளக்கம்:
(செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருள்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து; பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும் இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். 'வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும் கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) செவியால் நுகரும் இன்பத்தை யறியாத வாயால் நுகரும் இன் பதையறியும் மாக்கள் செத்தால் வரும் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு ,
(என்றவாறு). இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.