Fate 38

371

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி

Wealth-giving fate power of unflinching effort brings;
From fate that takes away idle remissness springs.

கைப்பொருள்‌ ஆவதற்குக்‌ காரணமான ஊழால்‌ சோர்வில்லாத முயற்சி உண்டாகும்‌; கைப்பொருள்‌ போவதற்குக்‌ காரணமான ஊழால்‌ சோம்பல்‌ ஏற்படும்‌.

Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

பரிமேலழகர் உரை கை பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம்.
விளக்கம்:
('ஆகூழ்!' 'போகூழ்' என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு-மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை ஊழாவது முன்பு செய்த வினை பின்பு விளையும் முறை. மேற்கூறிய அறப் பகுதியும் இனிக் கூறுகின்ற பொருட் பகுதியும். இன்பப் பகுதியும் முன் செய்த நல்வினையால் வருதலையும், இவற்றிற்கு மாறான பாவமும் வறுமையும் துன்பமும் தீவினையால் வருதலையும் அறியாதே அவை உலகத்தில் மக்கள் பலர் தமது முயற்சி யால் வந்தனவென்பரன்றே? அதற்காக இது கூறப்பட்டது. ஒருவன் செய்த வினை தனது பயனை வழுவின்றிப் பயத்தல் அறத்தினாகுமாதலான், இஃது அறத்தினிறுதிக்கண் கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் மடி தோன்றும்,
(என்றவாறு). இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.
372

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை

The fate that loss ordains makes wise men’s wisdom foolishness;
The fate that gain bestows with ampler powers will wisdom bless.

பொருள்‌ இழத்தற்குக்‌ காரணமான ஊழ்‌, பேதை யாக்கும்‌; பொருள்‌ ஆவதற்குக்‌ காரணமான ஊழ்‌ அறிவைப்‌ பெருக்கும்‌.

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

பரிமேலழகர் உரை இழவு ஊழ் (உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும்; ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும், கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை வரிக்கும்.
விளக்கம்:
('கைப்பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்', 'ஆகல் ஊழ்' என்பன இரண்டும் வேற்றுமைத் தொகை. 'உற்றக்கடை' என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாகிய அறிவையும் வேறுபடுக்கும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும்,
(என்றவாறு) இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.
373

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்

In subtle learning manifold though versed man be,
‘The wisdom, truly his, will gain supremacy.

ஒருவன்‌ நுட்பமான நூல்‌ பலவற்றைக்‌ கற்றாலும்‌, ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும்‌ அறிவே மேற்பட்டுத்‌ தோன்றும்‌.

Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

பரிமேலழகர் உரை நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும்; மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும்.
விளக்கம்:
(பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல்-கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். "காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்" (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும்,
(என்றவாறு). மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதொற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு , ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய்வறிவு வலியுடைத் தென்றார்.
374

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

Two fold the fashion of the world: some live in fortune’s light;
While other some have souls in wisdom’s radiance bright.

உலகத்தின்‌ இயற்கை, ஊழின்‌ காரணமாக இருவேறு வகைப்படும்‌; செல்வம்‌ உடையவராதலும்‌ வேறு, அறிவு உடையவராதலும்‌ வேறு.

There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

பரிமேலழகர் உரை உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு; திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு; அறிவுடையராதலும் வேறு.
விளக்கம்:
(செல்வத்தினைப்படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது; செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதர்க்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக் காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழி னால் வரும் ; ஆதலால், இரண்டு வகையாதல் உலகத்தியல்பு,
(என்றவாறு).
375

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.

செல்வத்தை ஈட்டும்‌ முயற்சிக்கு, ஊழ்வகையால்‌ நல்லவை எல்லாம்‌ தீயவை ஆதலும்‌ உண்டு; தீயவை நல்லவை ஆதலும்‌ உண்டு.

In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).

பரிமேலழகர் உரை செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு; நல்லவை எல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய் அழிக்கும்; தீயவும் நல்லவாம் - அதுவேயன்றித் தீயவை தாமும் நல்லவாய் ஆக்கும் ஊழ்வயத்தான்.
விளக்கம்:
('நல்லவை' 'தீயவை' என்பன காலமும், இடனும், கருவியும், தொழிலும் முதலாயவற்றை. 'ஊழான்' என்பது அதிகாரத்தால் பெற்றாம். அழிக்கும் ஊழ் உற்றவழிக் காலம் முதலிய நல்லவாயினும் அழியும்; ஆக்கும் ஊழ் உற்றவழி அவை தீயவாயினும் ஆகும் என்பதாயிற்று. ஆகவே, காலம் முதலிய துணைக்காரணங்களையும் வேறுபடுக்கும் என்பது பெற்றாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்கு முன்பு தீதாயிருந்தன வெல் லாம் நன்றாம்; அச்செல்வத்தை யில்லையாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தன வெல்லாம் தீதாம்,
(என்றவாறு)
376

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

Things not your own will yield no good, howe’er you guard with pain;
Your own, howe’er you scatter them abroad, will yours remain.

ஊழால்‌ தமக்கு உரியவை அல்லாத பொருள்கள்‌ வருந்திக்‌ காப்பாற்றினாலும்‌ நில்லாமல்‌ போகும்‌; தமக்கு உரியவை கொண்டுபோய்ச்‌ சொரிந்தாலும்‌ போகா.

Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

பரிமேலழகர் உரை பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம்; தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும், தம்மைவிட்டுப் போகா.
விளக்கம்:
(பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது, காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா; தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவைபோகா,
(என்றவாறு). இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவுபோதலும் ஊழினாலேயா மென்றது.
377

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது

Save as the ‘sharer’ shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be.

ஊழ்‌ ஏற்படுத்திய வகையால்‌ அல்லாமல்‌ முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச்‌ சேர்த்தவர்க்கும்‌ அவற்றை நுகர முடியாது.

Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

பரிமேலழகர் உரை கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும்; வகுத்தான் வகுத்த வகையல்லா துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான அல்லது நுகர்தல் உண்டாகாது.
விளக்கம்:
(ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் 'வகுத்தான்' என்றார். "இசைத்தலும் உரிய வேறிடத்தான்" (தொல். சொல். 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையாதார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், 'உம்மை' எச்ச உம்மை. வெறு முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினால் லது, கோடிபொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமை யுடைத்து,
(என்றவாறு). இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்

The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare.

வரவேண்டிய துன்பங்கள்‌ வந்து வருத்தாமல்‌ நீங்குமானால்‌, நுகரும்‌ பொருள்‌ இல்லாத வறியவர்‌ துறவறம்‌ மேற்கொள்வர்‌.

The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.

பரிமேலழகர் உரை துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர்; உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின்.
விளக்கம்:
('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நுகரும்பொரு ளில்லாதார் துறக்கவமைவர்; தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாது போமாயின்,
(என்றவாறு) இது துறவறமானது ஊழினால் வருமென்றது.
379

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்

When good things come, men view them all as gain;
When evils come, why then should they complain?

நல்வினை விளையும்போது நல்லவை எனக்‌ கருதி மகிழ்கின்றவர்‌, தீவினை விளையும்போது துன்பப்பட்டுக்‌ கலங்குவது ஏனோ?

How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?

பரிமேலழகர் உரை நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது, 'இவை நல்ல' என்று இயைந்து அனுபவிப்பார்; அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என் கருதி?
விளக்கம்:
(தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால, அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை மூன்று பாட்டானும் இன்பத் துன்பங்கட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) நன்மைவருங்காலத்து நன்றாகக் காண்பவர் தீமைவருங்காலத்து அல்லற்படுவது யாதினுக்கு?
(என்றவாறு) இஃது அறிந்தவர் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ளவேண்டும் மென்றது.
380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்

What powers so great as those of Destiny? Man’s skill
Some other thing contrives; but fate’s beforehand still.

ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும்‌ பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும்‌ அங்கும்‌ தானே முன்‌ வந்து நிற்கும்‌.

What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

பரிமேலழகர் உரை மற்று ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும்; தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்; ஊழின் பெருவலியா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள?
விளக்கம்:
('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதிகொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள்? பிறிதொன்றை யாராயுங் காலத்தும், தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டு நிற்கும், (எ-று).


transliteration

aakoolaal thonrum asaivinmai kaipporul
pokoolaal thonrum mati

paethaip padukkum ilavool arivakatrrum
aakalool utrrak katai

nunniya noolpala katrpinum matrrundhthan
unmai yarivae mikum

iruvaeru ulakaththu iyatrkai thiruvaeru
thaelliya raathalum vaeru

nallavai yellaaandh theeyavaam theeyavum
nallavaam selvam seyatrku

pariyinum aakaavaam paalalla uiththuch
soriyinum pokaa thama

vakuththaan vakuththa vakaiyallaal koati
thokuththaarkku thuiththal arithu

thurappaarman thuppura villaar uratrpaala
oottaa kaliyu maenin

nanraangkaal nallavaak kaanpavar anraangkaal
allatr paduva thaevan

oolitr paeruvali yaavula matrronru
koolinundh thaanmundh thurum