குறள் 374

ஊழ்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

iruvaeru ulakaththu iyatrkai thiruvaeru
thaelliya raathalum vaeru


Shuddhananda Bharati

Destiny

Two natures in the world obtain
Some wealth and others wisdom gain.


GU Pope

Fate

Two fold the fashion of the world: some live in fortune's light;
While other some have souls in wisdom's radiance bright.

There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.


Mu. Varadarajan

உலகத்தின்‌ இயற்கை, ஊழின்‌ காரணமாக இருவேறு வகைப்படும்‌; செல்வம்‌ உடையவராதலும்‌ வேறு, அறிவு உடையவராதலும்‌ வேறு.


Parimelalagar

உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு; திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு; அறிவுடையராதலும் வேறு.
விளக்கம்:
(செல்வத்தினைப்படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது; செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதர்க்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக் காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழி னால் வரும் ; ஆதலால், இரண்டு வகையாதல் உலகத்தியல்பு,
(என்றவாறு).