Mental Disturbance caused by the Beauty of the Princess 109

1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
Is she a maid of human kind? All wildered is my mind!

தெய்வப்‌ பெண்ணோ! மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப்‌ பெண்ணோ? என்‌ நெஞ்சம்‌ மயங்குகின்றதே!

Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.

பரிமேலழகர் உரை தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது. கனங்குழை - இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் - இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் - அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர் கொல் - அன்றி ஒருமானுட மாதரோ; என நெஞ்சு மாலும் - இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது.
விளக்கம்:
(ஓ - அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற்சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். கனங்குழை: ஆகுபெயர். 'கணங்குழை' என்ற பாடம் ஓதி, 'பலவாய்த் திரண்ட குழை' என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும் தன் வருத்தமும் பற்றி, 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும்பற்றி, 'ஆய்மயில்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினான்.)
மணக்குடவர் உரை தகையணங்குறுத்தலாவது மைந்தர்க்கும் மகளிர்க்கும் கல்வியினானாகிய இன் பப்பகுதி கூறுதல். அஃதெங்ஙனங் கூறினாரெனின், ஒருவனுக்கு இன்பங் கலத் தற்கிடம் கன்னியரும் கணிகையரும், பிறர் தாரமுமென மூவகையல்லதில்லை ; அவற்றுள், பிறர்மனைக் கூட்டம் பாவந் தருமென்று அறத்துப்பாலுட் கூறிக் கணிகையர் கூட்டம் பொருட்கேடு தருமென்று பொருட்பாலிற் கூறினாராத லின், அறனும் பொருளும் இன்பமும் வழுவாமல் வருவது கன்னியர் கூட்ட மென்றாரென்பது. (இதன் பொருள்) இக் கனங்குழையை யுடையாள் தெய்வங் கொல்லோ ? நல்ல தோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் பயங்கா நின்றவற்றுள் யாதோ?
(என்றவாறு)
1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

She of the beaming eyes, To my rash look her glance replies,
As if the matchless goddess’ hand Led forth an armed band.

நோக்கிய அவள்‌ பார்வைக்கு எதிரே நோக்குதல்‌ தானே தாக்கி வருத்தும்‌ அணங்கு, ஒரு சேனையயும்‌ கொண்டு வந்து தாக்கினாற்‌ போன்றது.

This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contendagainst me.

பரிமேலழகர் உரை மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என்நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற்போலும் தன்மையை உடைத்து.
விளக்கம்:
(மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல் என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல் வரும் தானையைக் கொண்டுவந்தது போலும்.
(என்றவாறு). தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்ட தனால் வருத்த மிக்கது கூறியது.
1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

Death’s form I formerly Knew not; but now ‘tis plain to me;
He comes in lovely maiden’s guise, With soul-subduing eyes.

எமன்‌ என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்‌; இப்பொழுது கண்டறிந்தேன்‌; அது பெண்‌ தன்மையுடன்‌ போர்‌ செய்யும்‌ பெரிய கண்களை உடையது.

I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with(the help of) female qualities.

பரிமேலழகர் உரை இதுவும் அது. கூற்று என்பதனைப் பண்டு அறியேன் - கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டு அறிவதல்லது கண்டறியேன்; இனி அறிந்தேன் - இப்பொழுது கண்டறிந்தேன்; பெண் தகையாள் பேர் அமர்க்கட்டு - அது பண்தகையுடனே பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து.
விளக்கம்:
(பெண்தகை: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக்குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்: அமர் செய்தல், பெயரடியாய வினை. பெண்தகையால் இன்பம் பயத்தலும் உண்டெனும் துன்பம் பயத்தல் மிகுதிபற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.)
மணக்குடவர் உரை (இ-ள்.) பண்டு கூற்றின் வடிவு இன்ன பெற்றிததென்பதை அறியேன்; இப் பொழுது அறிந்தேன்; அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களை யுடைத்து,
(என்றவாறு). இது நம்மை வருத்துதற்குத் தக்காளென்னுங் குறிப்பு.
1084

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்

In sweet simplicity, A woman’s gracious form hath she;
But yet those eyes, that drink my life, Are with the form at strife!

பெண்தன்மை உடைய இந்தப்‌ பேதைக்குக்‌ கண்கள்‌ கண்டவரின்‌ உயிரை உண்ணும்‌ தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this femininesimplicity.

பரிமேலழகர் உரை இதுவும் அது. பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்ந்திருந்தன.
விளக்கம்:
(அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தம்மைக் கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே, பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள்,
(என்றவாறு). அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத்தென்று கண் ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது.
1085

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து

The light that on me gleams, Is it death’s dart? or eye’s bright beams?
Or fawn’s shy glance? All three appear In form of maiden here.

எமனோ? கண்ணோ? பெண்மானோ? இந்த இளம்‌ பெண்ணின்‌ பார்வை இந்த மூன்றன்‌ தன்மையும்‌ உடையதாக இருக்கின்றது.

Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?

பரிமேலழகர் உரை இதுவும் அது. கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமை யான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ; அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.
விளக்கம்:
(இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில் பற்றி வந்த ஐயநிலை உவமம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ ? நெவ தலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து,
(என்றவாறு). இக் கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ் செய்வதன் முன்னே அதனைக்கோடி மறைத்ததாயினும், அஃது அதனைக் கடத்தலும் உடையது; அதனால், அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.
1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்

If cruel eye-brow’s bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart.

வளைந்த புருவங்கள்‌ கோணாமல்‌ நேராக இருந்து மறைக்குமானால்‌, இவளுடைய கண்கள்‌ யான்‌ நடுங்கும்படியான துன்பத்தைச்‌ செய்யமாட்டா.

Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows.

பரிமேலழகர் உரை இதுவும் அது கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடைய வாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - துயரைச் செய்யமாட்டா.
விளக்கம்:
(நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினார். நடுங்கு அஞர் - நடுங்கற்க ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவா யின், இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்கும் துன்பத் தைச் செய்யலாற்றா,
(என்றவாறு). இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி , கண்ணை மறைத்துத் தேற்றிய புருவ முறிவுகண்டு அவன் கூறியது.
1087

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

As veil o’er angry eyes Of raging elephant that lies,
The silken cincture’s folds invest This maiden’s panting breast.

மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல்‌ அணிந்த ஆடை, மதம்‌ பிடித்த ஆண்யாளையின்மேல்‌ இட்ட முகபடாம்‌ போன்றது.

The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.

பரிமேலழகர் உரை அவள் முலைகளினாய வருத்தம் கூறியது. மாதர் படா முலைமேல் துகில் - இம்மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின், கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்.
விளக்கம்:
(கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றார். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றுஞ் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். 'உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படா போலும்; மாதரே! நினது படாமுலை மேல் இட்டதுகில்,
(என்றவாறு).
1088

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு

Ah! woe is me! my might, That awed my foemen in the fight,
By lustre of that beaming brow Borne down, lies broken now!

போரக்களத்தில்‌ பகைவரும்‌ அஞ்சுதற்குக்‌ காரணமான என்‌ வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத்‌ தோற்று அழிந்ததே!

On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.

பரிமேலழகர் உரை நுதலினாய வருத்தம் கூறியது. ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு - போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி; ஒள் நுதற்குஓ உடைந்தது - இம்மாதரது ஒள்ளிய நுதலொன்றற்குமே அழிந்துவிட்டது.
விளக்கம்:
('மாதர்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'ஞாட்பினுள்' என்றதனால், பகைவராதல் பெற்றாம். 'பீடு' என்ற பொதுமையான் மனவலியும் காய வலியும் கொள்க. 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ் வலிகளது பெருமையும் நுதலது சிறுமையும் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின், தற்புகழ்தல் அன்றாயிற்று.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இவ்வெள்ளிய நுதற்கு மிகவும் கெட்டது, போரின் கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி,
(என்றவாறு). இது மேற்கூறிய தலைமகன் மிகவுங் கவிழ்ந்து நிலநோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது.
1089

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து

Like tender fawn’s her eye; Clothed on is she with modesty;
What added beauty can be lent; By alien ornament?

பெண்மானைப்‌ போன்ற இளமைப்‌ பார்வையும்‌ நாணமும்‌ உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும்‌ இல்லாத அணிகளைச்‌ செய்து அணிவது ஏனோ?

Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?

பரிமேலழகர் உரை அணிகலத்தானாய வருத்தம் கூறியது. பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான்பிணைஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து ?
விளக்கம்:
(மடநோக்கு - வெருவுதல் உடைய நோக்கு. 'இவட்குப் - பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பிணையை யொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணி னையும் உடையவட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துதற்கு இவைதாடே அமையும்,
(என்றவாறு). இது தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.
1090

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று

The palm-tree’s fragrant wine, To those who taste yields joys divine;
But love hath rare felicity For those that only see!

கள்‌, தன்னை உண்டவரிடத்தில்‌ அல்லாமல்‌ காமத்தைப்‌ போல்‌ தன்னைக்‌ கண்டவரிடத்தில்‌ மயக்கத்தை உண்டாக்குவதில்லை

Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.

பரிமேலழகர் உரை தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது. அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று.
விளக்கம்:
(அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அது பெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. ''அரிமயிர் திரள் முன்கை'' (புறநா. 11) என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.)
மணக்குடவர் உரை (இதன் பொருள்) அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று,
(என்றவாறு). இது தலைமகள் தலைமகனைக்கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.


transliteration

anangkukol aaimayil kollo kanangkulai
maatharkol maalumyen naenjsu

nokkinaal nokkethir nokkuthal thaakkanangku
thaanaikkon danna thutaiththu

pandariyaen kootrraen pathanai iniyarindhthaen
paendakaiyaal paeramark katdu

kantaar uyirunnum thotrraththaal paendakaip
paethaikku amarththana kan

kootrramo kanno pinaiyo madavaral
nokkamim moonrum utaiththu

kodumpuruvam koataa maraippin nadungkagnyar
seiyala manival kan

kataaak kalitrrinmaetr katpataam maathar
pataaa mulaimael thukil

onnuthatr koao utaindhthathae gnyaatpinul
nannaarum utkumaen peedu

pinaiyaer madanokkum naanum utaiyaatku
aniyaevano yaethila thandhthu

untaarkan allathu adunaraak kaamampol
kantaar makilseithal inru