குறள் 1086

தகையணங்குறுத்தல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்

kodumpuruvam koataa maraippin nadungkagnyar
seiyala manival kan


Shuddhananda Bharati

Beauty's dart

If cruel brows unbent, would screen
Her eyes won't cause me trembling pain.


GU Pope

Mental Disturbance caused by the Beauty of the Princess

If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;
The shafts that wound this trembling heart Her eyes no more would dart.

Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows.


Mu. Varadarajan

வளைந்த புருவங்கள்‌ கோணாமல்‌ நேராக இருந்து மறைக்குமானால்‌, இவளுடைய கண்கள்‌ யான்‌ நடுங்கும்படியான துன்பத்தைச்‌ செய்யமாட்டா.


Parimelalagar

இதுவும் அது கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடைய வாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - துயரைச் செய்யமாட்டா.
விளக்கம்:
(நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினார். நடுங்கு அஞர் - நடுங்கற்க ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.)


Manakkudavar

(இதன் பொருள்) வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவா யின், இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்கும் துன்பத் தைச் செய்யலாற்றா,
(என்றவாறு). இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி , கண்ணை மறைத்துத் தேற்றிய புருவ முறிவுகண்டு அவன் கூறியது.