குறள் 1087

தகையணங்குறுத்தல்

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

kataaak kalitrrinmaetr katpataam maathar
pataaa mulaimael thukil


Shuddhananda Bharati

Beauty's dart

Vest on the buxom breast of her
Looks like rutting tusker's eye-cover.


GU Pope

Mental Disturbance caused by the Beauty of the Princess

As veil o'er angry eyes Of raging elephant that lies,
The silken cincture's folds invest This maiden's panting breast.

The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.


Mu. Varadarajan

மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல்‌ அணிந்த ஆடை, மதம்‌ பிடித்த ஆண்யாளையின்மேல்‌ இட்ட முகபடாம்‌ போன்றது.


Parimelalagar

அவள் முலைகளினாய வருத்தம் கூறியது. மாதர் படா முலைமேல் துகில் - இம்மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின், கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும்.
விளக்கம்:
(கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றார். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றுஞ் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். 'உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.)


Manakkudavar

(இதன் பொருள்) மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படா போலும்; மாதரே! நினது படாமுலை மேல் இட்டதுகில்,
(என்றவாறு).