Power in Action 67

661

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

What men call ‘power in action’ know for ‘power of mind’
Externe to man all other aids you find.

ஒரு தொழிலின்‌ திட்பம்‌ என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின்‌ திட்பமே (உறுதியே) ஆகும்‌; மற்றவை எல்லாம்‌ வேறானவை.

Firmness in action is (simply) one’s firmness of mind; all other (abilities) are not of this nature.

பரிமேலழகர் உரை வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினை செய்தற்கண் திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானோருவன் மனத்தினது திண்மை; மற்றைய எல்லாம் பிற - அஃது ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா.
விளக்கம்:
[ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு முதலியவற்றின் திண்மைகள், அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், 'மற்றைய' என்றும், வேண்டினும் அஃது இவ்வழிப் பயனிலவாகலின் 'பிற' என்றும் கூறினார். இதனால் வினைத் திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை வினைத்திட்பமாவது வினையின் கண் திண்ணியராதல். மேல் நல்வினையைச் செய்யவேண்டு மென்றார். அது செய்யுங்கால் திண்ணியராகிச் செயல்வேண்டு மாதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) வினையினிடத்துத் திண்மை யென்று சொல்லப்படுவது ஒரு வன் மனத்து உண்டான திண்மை; அதனை யொழிய, மற்றவையெல்லாம் தின்மையென்று சொல்லப்படா, (எ - று ). மற்றவையென்றது கருவியும் உபாயமும்.
662

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

“Each hindrance shun’, ‘unyielding onward press, If obstacle be there,’
These two define your way, so those that search out truth declare.

இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல்‌, வந்தபின்‌ தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்‌ திட்பம்‌ பற்றி ஆராய்ந்தவரின்‌ கொள்கையாம்‌.

Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.

பரிமேலழகர் உரை ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர்.
விளக்கம்:
[தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு என்றமையின், 'உற்றபின்' என்றும், இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார். 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வினை செய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும், அவ்விடத் துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார், நீதி நெறியை ஆராய்ந்தவர்,
(என்றவாறு).
663

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்

Man’s fitting work is known but by success achieved;
In midst the plan revealed brings ruin ne’er to be retrieved.

செய்யும்‌ செயலை முடிவில்‌ வெளிப்படும்படியாகச்‌ செய்யும்‌ தகுதியே ஆண்மையாகும்‌; இடையில்‌ வெளிப்பட்டால்‌ நீங்காத துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.

So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow.

பரிமேலழகர் உரை கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை - செய்யப்படும் வினையை முடிவின்க புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும் - அங்ஙனமின்றி இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்.
விளக்கம்:
[மறைத்துச் செய்வதாவது: அங்கம் ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும்; தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான். அவர் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண் தன்மையான் வருதலின் 'ஆண்மை' எனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன் அறிந்து அவ்வினையை விலக்குதல் செய்வானை விலக்குதல் செய்வர் ஆகலின், அவற்றான் வருவன. விழுமம்: சாதிப் பெயர். இவை இரண்டு பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு வினையைத் தொடங்கினால், முடிவிலே சென்று மீளல் செய் வது ஆண்மையாவது ; இடையிலே மீள்வனாயின், அது மிகுதியைக் கெடாத நோயைக் கொடுக்கும்,
(என்றவாறு). சென்று மீளல் சுழல்தல் ஆயிற்று. இது தொடங்கின வினையை முடியச் செய்ய வேண்டுமென்றது.
664

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one’s life by words they say!

“இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்‌’ என்று சொல்லுதல்‌ எவர்க்கும்‌ எளியனவாம்‌ ; சொல்லியபடி செய்து முடித்தல்‌ அரியனவாம்‌.

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to doaccording to what has been said.

பரிமேலழகர் உரை சொல்லுதல் யார்க்கும் எளிய -யாம் இவ்வினையை இவ்வாற்றால் செய்தும் என நிரல்படச் சொல்லுதல் யாவர்க்கும் எளிய; சொல்லிய வண்ணம் செயல் அரியவாம் - அதனை அவ்வாற்றானே செய்தல் யாவர்க்கும் அரியவாம்.
விளக்கம்:
[சொல்லுதல், செயல் என்பன சாதிப்பெயர். அரியவற்றை எண்ணிச் சொல்லுதல் திட்பமில்லாதார்க்கும் இயறலின், 'எளிய' என்றார். இதனால் அதனது அருமை கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒரு வினையை இவ்வாறு செய்தும் என்று சொல்லுதல் யாவர். கும் எளிய வாம்; அதனைச் சொல்லிய வாற்றால் செய்து முடித்தல் யாவர்க்கும் அரியவாம்,
(என்றவாறு)
665

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்

The power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state.

செயல்‌ திறனால்‌ பெருமை பெற்று உயர்ந்தவரின்‌ வினைத்‌ திட்பமானது, நாட்டை ஆளும்‌ அரசனிடத்திலும்‌ எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்‌.

The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

பரிமேலழகர் உரை வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம் - எண்ணத்தால் சிறப்பெய்திப் பிற இலக்கணங்களானும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்; வேந்தன் கண்ணே உறுதலை எய்தலான், எல்லாரானும் நன்கு மதிக்கப்படும்.
விளக்கம்:
[வேந்தன் கண் ஊறு எய்தல் - எடுத்த வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல். 'எய்தலான்' என்பது திரிந்து நின்றது. உள்ளல் - மதிப்பான் மறவாமை. இதனான் அதன் சிறப்புக் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது வினைத்திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாரானும் நினைக்கப்படும்,
(என்றவாறு). இது வினைத்திட்ப முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது.
666

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

Whate’er men think, ev’n as they think, may men obtain,
If those who think can steadfastness of will retain.

எண்ணியவர்‌ (எண்ணியபடியே செயல்‌ ஆற்றுவதில்‌) உறுதியுடையவராக இருக்கப்‌ பெற்றால்‌, அவர்‌ எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்‌.

If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain whatthey have desired even as they have desired it.

பரிமேலழகர் உரை எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின்.
விளக்கம்:
['எளிதின் எய்துப' என்பார், 'எண்ணி யாங்கு எய்துப' என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை. முடியும்; அது முடிய, அவை யாவையும் கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும் பயன் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இ - ள் தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்; அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையா ராகப் பெறுவாராயின்,
(என்றவாறு). இது வினையின் கண் திண்மை வேண்டு மென்றது.
667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

Despise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!

உருளும்‌ பெரிய தேர்க்கு அச்சில்‌ இருந்து தாங்கும்‌ சிறிய ஆணிபோன்றவர்கள்‌ உலகத்தில்‌ உள்ளனர்‌. அவர்களுடைய உருவின்‌ சிறுமையைக்‌ கண்டு இகழக்‌ கூடாது.

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car.

பரிமேலழகர் உரை உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி அன்னார் உடைத்து - உருளா நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்; உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அதனால் அவரை வடிவின் சிறுமைநோக்கி இதழ்தலை யொழிக.
விளக்கம்:
[சிறுமை, 'எள்ளாமை வேண்டும்' என்பதனானும், உவமையானும் பெற்றாம். அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது அதன் கடைக்கண் செருகுமது. அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து; அதுபோல, வடிவாற் சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர்; அவரை அத்திட்பம் நோக்கி அறிந்து கொள்க என்பதாம். இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத் தவிர்த்தல் வேண்டும்; உருளாநின்ற பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங் கும் அச்சின் புறத்துச் செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ் வுலகம் உடைத்து ; ஆதலால்,
(என்றவாறு).
668

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்

What clearly eye discerns as right, with steadfast will,
And mind unslumbering, that should man fulfil.

மனம்‌ கலங்காமல்‌ ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச்‌ சோர்வு கொள்ளாமல்‌ காலந்‌ தாழ்த்தாமல்‌ செய்து முடிக்க வேண்டும்‌.

An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.

பரிமேலழகர் உரை கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி நீட்டித் தலை யொழிந்து செய்க.
விளக்கம்:
[கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின், தெளிந்து பலகால் ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை திட்பம் உடைமை].
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கலக்கமின்றி ஆராய்ந்து கண்ட வினையிடத்துப் பின்னைத் துளக்க மின்றி, அதனை நீட்டியாது செய்க,
(என்றவாறு). இது விரைந்து செய்ய வேண்டு மென்றது.
669

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

Though toil and trouble face thee, firm resolve hold fast,
And do the deeds that pleasure yield at last.

(முடிவில்‌ இன்பம்‌ கொடுக்கும்‌ தொழிலைச்‌ செய்யும்‌ போது துன்பம்‌ மிக வந்தபோதிலும்‌ துணிவு மேற்‌ கொண்டு செய்து முடிக்க வேண்டும்‌.

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).

பரிமேலழகர் உரை துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின் கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.
விளக்கம்:
[துணிவு-கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாம இன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச் செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினை செய்யுமாறு கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) முற்பாடு துன்பம் உறவரினும், துணிந்து செய்க; பிற்பாடு இன் பம் பயக்கும் வினையை,
(என்றவாறு).
670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு

The world desires not men of every power possessed,
Who power in act desire not,- crown of all the rest.

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும்‌, செய்யும்‌ தொழிலில்‌ உறுதி இல்லாதவரை உலகம்‌ விரும்பிப்‌ போற்றாது.

The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.

பரிமேலழகர் உரை வினைத்திட்பம் வேண்டாரை - வினைத்திட்பத்தை 'இது நமக்குச் சிறந்தது' என்று கொள்ளாத அமைச்சரை; எனைத் திட்பம் எய்தியக்கண்ணும் - ஒழிந்த திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு - நன்கு மதியார் உயர்ந்தோர்.
விளக்கம்:
[மனத்தின்கண் திட்பமில்லாதார்க்குப் படை, அரண், நட்பு முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம்; ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பதுபற்றி 'உலகு வேண்டாது' என்றார். இதனான் வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை பெற்ற விடத்தும், வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார்,
(என்றவாறு) பலபொருளும் அமைதியும் உடையார்க்கு வினைத்திட்ப மின்றானால் வருங் குற்ற மென்னை யென்றார்க்கு , இது கூறப்பட்டது.


transliteration

vinaiththitpam yenpathu oruvan manaththitpam
matrraiya yellaam pira

oororaal utrrapin olkaamai ivvirantin
aaraenpar aaindhthavar koal

kataikkotkach seithakka thaanmai itaikkotkin
yetrraa vilumandh tharum

solluthal yaarkkum yeliya ariyavaam
solliya vannam seyal

veeraeithi maantaar vinaiththitpam vaendhthankan
ooraeithi ullap padum

yenniya yenniyaangku yeithuvar yenniyaar
thinniyar aakap paerin

uruvukandu yellaamai vaendum urulpaerundhthaerkku
achsaani annaar utaiththu

kalangkaathu kanda vinaikkan thulangkaathu
thookkang katindhthu seyal

thunpam uravarinum seika thunivaatrri
inpam payakkum vinai

yenaiththitpam yeithiyak kannum vinaiththitpam
vaentaarai vaentaathu ulaku