குறள் 669

வினைத்திட்பம்

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

thunpam uravarinum seika thunivaatrri
inpam payakkum vinai


Shuddhananda Bharati

Powerful acts

Do with firm will though pains beset
The deed that brings delight at last.


GU Pope

Power in Action

Though toil and trouble face thee, firm resolve hold fast,
And do the deeds that pleasure yield at last.

Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).


Mu. Varadarajan

(முடிவில்‌ இன்பம்‌ கொடுக்கும்‌ தொழிலைச்‌ செய்யும்‌ போது துன்பம்‌ மிக வந்தபோதிலும்‌ துணிவு மேற்‌ கொண்டு செய்து முடிக்க வேண்டும்‌.


Parimelalagar

துன்பம் உறவரினும் - முதற்கண் மெய்ம்முயற்சியால் தமக்குத் துன்பம் மிக வருமாயினும்; இன்பம் பயக்கும் வினை துணிவு ஆற்றிச் செய்க - அது நோக்கித் தளராது முடிவின் கண் இன்பம் பயக்கும் வினையைத் திட்பமுடையராய்ச் செய்க.
விளக்கம்:
[துணிவு-கலங்காமை. அஃதுடையார்க்கு அல்லது கணிகமாய முயற்சித்துன்பம் நோக்காது நிலையுதலுடைய பரிணாம இன்பத்தை நோக்கிச் செய்தல் கூடாமையின், 'துணிவாற்றிச் செய்க' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் வினை செய்யுமாறு கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) முற்பாடு துன்பம் உறவரினும், துணிந்து செய்க; பிற்பாடு இன் பம் பயக்கும் வினையை,
(என்றவாறு).