குறள் 662

வினைத்திட்பம்

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

oororaal utrrapin olkaamai ivvirantin
aaraenpar aaindhthavar koal


Shuddhananda Bharati

Powerful acts

Shun failing fuss; fail not purpose
These two are maxims of the wise.


GU Pope

Power in Action

"Each hindrance shun’, 'unyielding onward press, If obstacle be there,’
These two define your way, so those that search out truth declare.

Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject.


Mu. Varadarajan

இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல்‌, வந்தபின்‌ தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்‌ திட்பம்‌ பற்றி ஆராய்ந்தவரின்‌ கொள்கையாம்‌.


Parimelalagar

ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர்.
விளக்கம்:
[தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு என்றமையின், 'உற்றபின்' என்றும், இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார். 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர்; அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.]


Manakkudavar

(இதன் பொருள்) வினை செய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும், அவ்விடத் துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார், நீதி நெறியை ஆராய்ந்தவர்,
(என்றவாறு).