Power in Speech 65

641

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

A tongue that rightly speaks the right is greatest gain,
It stands alone midst goodly things that men obtain.

நாவன்மையாகிய நலம்‌ ஒருவகைச்‌ செல்வம்‌ ஆகும்‌; அந்த நாநலம்‌ தனிச்சிறப்புடையது. ஆகையால்‌ மற்ற எந்த நலங்களிலும்‌ அடங்குவது அன்று.

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.

பரிமேலழகர் உரை நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.
விளக்கம்:
['நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வய்த்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.]
மணக்குடவர் உரை சொல்வன்மையாவது வார்த்தை சொல்ல வல்லவ னாதல். அரசர்க்குக் கல்வி இன்றியமையாதது போல் அமைச்சர்க்கு இஃது இன்றியமையாதது ஆதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடை மையாவது ; அந்நலம் எல்லா நலத் துள்ளும் உள்ளதொரு நலமன்று ; மிக்கது. () எல்லா நலத்துள்ளும் உள்ள தொருநலமன்று என்றமையால், இன்பம் பயக்கு மென்பதாயிற்று.
642

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

Since gain and loss in life on speech depend,
From careless slip in speech thyself defend.

ஆக்கமும்‌ கேடும்‌ சொல்கின்ற சொல்லால்‌ வருதலால்‌ ஒருவன்‌ தன்னுடைய சொல்லில்‌ தவறு நேராமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.

பரிமேலழகர் உரை ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும் அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்; சொல்லின் கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக் காக்க.
விளக்கம்:
[ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார். செய்யுள் ஆகலின்' சுட்டுப் பெயர் முன்வந்தது. பிறர் சோர்வு போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஆக்கமும் கேடும் சொல்லினால் வருதலால், சொல்லின்கண் சோர் வைப் போற்றிக் காக்க வேண்டும்,
(என்றவாறு). இது சோர்வுபடாமற் சொல்லல் வேண்டு மென்றது.
643

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

‘Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear.

சொல்லும்போது கேட்டவரைத்‌ தன்‌ வயப்படுத்தும்‌ பண்புகளுடன்‌, கேட்காதவரும்‌ கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

The (minister’s) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) andis so delivered as to make even his enemies desire (his friendship).

பரிமேலழகர் உரை கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது - மற்றைப் பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே, சொல்லாம் - அமைச்சர்க்குச் சொல்லாவது.
விளக்கம்:
[அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. இனி 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வின வியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர்.' 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதா ரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது,
(என்றவாறு). இது மேம்படக் கூறல் வேண்டு மென்றது.
644

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்

Speak words adapted well to various hearers’ state;
No higher virtue lives, no gain more surely great.

சொல்லின்‌ திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்‌; அத்தகைய சொல்வன்மையைவிடச்‌ சிறந்த அறமும்‌ பொருளும்‌ இல்லை.

Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.

பரிமேலழகர் உரை சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான்.
விளக்கம்:
[அறத்திறங்களாவன: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம் பட்ட அறனும் பொருளும் இல்லை,
(என்றவாறு). தாமறியவே, புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறா மையும் உளவாம்; ஆதலான், அறனாயிற்று ; அரசன்மாட்டும் ஏனையோர்மாட்டும் தகுதியறிந்து சொல்லுதலான், பொருளாயிற்று.
645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

Speak out your speech, when once ‘tis past dispute
That none can utter speech that shall your speech refute.

வேறொரு சொல்‌ அந்தச்‌ சொல்லை வெல்லும்‌ சொல்லாக இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக்‌ கருதியதைச்‌ சொல்லவேண்டும்‌.

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

பரிமேலழகர் உரை சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக.
விளக்கம்:
[பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச் சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல்; அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல், வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) சொல்லைச் சொல்லுக ; தான் சொல்ல நினைத்த அச் சொல்லைப் பிறிதொரு சொல்லாய் வெல்லுஞ் சொல் இல்லை யாதலை யறிந்து,
(என்றவாறு).
646

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

Charming each hearer’s ear, of others’ words to seize the sense,
Is method wise of men of spotless excellence.

பிறர்‌ விரும்பும்‌ படியாகத்‌ தாம்‌ சொல்லி, பிறர்‌ சொல்லும்‌ போது அச்சொல்லின்‌ பயனை ஆராய்ந்து கொள்ளுதல்‌ மாசற்ற சிறப்புடையவரின்‌ கொள்கையாகும்‌.

It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.

பரிமேலழகர் உரை வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொற் பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி; அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு.
விளக்கம்:
[பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லி, பிறர் சொல் லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல், மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு,
(என்றவாறு). இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.
647

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

Mighty in word, of unforgetful mind, of fearless speech,
‘Tis hard for hostile power such man to overreach.

தான்‌ கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய்‌, சொல்லும்‌ போது சோர்வு இல்லாதவனாய்‌, அஞ்சாதவனாய்‌ உள்ளவனை மாறுபாட்டால்‌ வெல்வது யார்க்கும்‌ முடியாது.

It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.

பரிமேலழகர் உரை சொலன் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச் சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப் பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது - அவனை மாறுபாட்டின் கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது.
விளக்கம்:
[ஏற்பச் சொல்லுதல் - அவர்க்கு அவை காரியமல்லவாயினும், ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல். சோர்வு சொல்ல வேண்டுவதனை மறப்பான் ஒழிதல். இம்மூன்று குணமும் உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து வெல்வாரில்லை என்பதாம்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) ஒருவன் சொல்ல வல்லவனுமாய் அதனைச் சோரவிடுதலும் இல் லானாய் அஞ்சாது சொல்லுதலும் உடையவனாயின், அவனை மாறுபாட்டின்கண் வெல்லுதல் யாவர்க்கும் அரிது,
(என்றவாறு).
648

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

Swiftly the listening world will gather round,
When men of mighty speech the weighty theme propound.

கருத்துக்களை ஒழுங்காகக்‌ கோத்து இனிமையாகச்‌ சொல்ல வல்லவரைப்‌ பெற்றால்‌, உலகம்‌ விரைந்து அவருடைய ஏவலைக்‌ கேட்டு நடக்கும்‌.

If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner,the world would readily accept them.

பரிமேலழகர் உரை தொழில் நிரந்து இனிது செல்லுதல் வல்லார்ப்பெறின் - சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து கேட்கும் - உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்ளும்.
விளக்கம்:
['தொழில்' சாதியொருமை. நிரல்படக் கோத்தல் - முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனி தாதல் - கேட்டார்க்கு இன்பம் பயத்தல். ''சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்,'' என்ற வடமொழி பற்றி, 'பெறின்' என்றார். ஈண்டும் 'கேட்டல்' ஏற்றுக் கோடல். இவை இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின், உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர்,
(என்றவாறு). இது சொற்களைச் சொல்லின் , இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.
649

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்

Who have not skill ten faultless words to utter plain,
Their tongues will itch with thousand words man’s ears to pain.

குற்றமற்றவையாகிய சில சொற்களைச்‌ சொல்லத்‌ தெரியாதவர்‌, உண்மையாகவே பல சொற்களைச்‌ சொல்லிக்‌ கொண்டிருக்க விரும்புவர்‌.

They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.

பரிமேலழகர் உரை மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றன வாய்ச் சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்; பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச் சொல்ல விரும்புவர்.
விளக்கம்:
[குற்றம் மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின. இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று விரும்புவாரும் உளர். இவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) பல சொற்களைச் சொல்லக் காதலியா நிற்பர், குற்றமற்ற சில சொற்களைத் தெளியச் சொல்லலை அறியமாட்டாதார்,
(என்றவாறு). மன்ற - தெளிய . இது சுருங்கச் சொல்லல் வேண்டு மென்றது.
650

இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்

Like scentless flower in blooming garland bound
Are men who can’t their lore acquired to other’s ears expound.

தாம்‌ கற்ற நூற்பொருளைப்‌ பிறர்‌ உணருமாறு விரித்துரைக்க முடியாதவர்‌, கொத்தாக மலர்ந்திருந்த போதிலும்‌ மணம்‌ கமழாத மலரைப்‌ போன்றவர்‌.

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.

பரிமேலழகர் உரை கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர்.
விளக்கம்:
[செவ்விபெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாதபூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்லமாட்டாதார் நன்கு மதிக்கப்பட்டார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.]
மணக்குடவர் உரை (இதன் பொருள்) இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றத னைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்,
(என்றவாறு). இது சுருங்கச் சொல்லுதலே யன்றி, வேண்டுமிடத்து விரித்து சொல்லல் வேண்டு மென்றது.


transliteration

naanalam yennum nalanutaimai andhnalam
yaanalaththu ullathooum anru

aakkamung kaedum athanaal varuthalaal
kaaththompal sollinkat chorvu

kaettaarp pinikkum thakaiyavaaik kaelaarum
vaetpa molivathaam sol

thiranarindhthu solluka sollai aranum
porulum athaninooungku il

solluka sollaip pirithorsol achsollai
vaellunjsol inmai arindhthu

vaetpaththaanj sollip pirarsol payankoadal
maachiyin maachatrraar koal

solalvallan chorvilan anjsaan avanai
ikalvaellal yaarkkum arithu

viraindhthu tholilkaetkum gnyaalam nirandhthinithu
solluthal vallaarp paerin

palasollak kaamuruvar manramaa chachi
silasollal thaetrraa thavar

inaroolththum naaraa malaranaiyar katrrathu
unara viriththuraiyaa thaar