குறள் 643

சொல்வன்மை

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

kaettaarp pinikkum thakaiyavaaik kaelaarum
vaetpa molivathaam sol


Shuddhananda Bharati

Power of speech

A speech is speech that holds ears
And attracts ev'n those that are averse.


GU Pope

Power in Speech

'Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear.

The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) andis so delivered as to make even his enemies desire (his friendship).


Mu. Varadarajan

சொல்லும்போது கேட்டவரைத்‌ தன்‌ வயப்படுத்தும்‌ பண்புகளுடன்‌, கேட்காதவரும்‌ கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.


Parimelalagar

கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நட்பாய் ஏற்றுக் கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி; கேளாரும் வேட்ப மொழிவது - மற்றைப் பகையாய் ஏற்றுக் கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே, சொல்லாம் - அமைச்சர்க்குச் சொல்லாவது.
விளக்கம்:
[அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல். 'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும் செயப்பாட்டு வினை கொண்டது. இனி 'கேட்டார்' 'கேளார்' என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வின வியார் வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர்.' 'தகையவாய்' என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்; அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) வினாவினாரைப் பிணித்துக் கொள்ளுந் தகையவாய், வினாவாதா ரும் விரும்புமாறு சொல்லுதல் சொல்லாவது,
(என்றவாறு). இது மேம்படக் கூறல் வேண்டு மென்றது.