குறள் 644

சொல்வன்மை

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்

thiranarindhthu solluka sollai aranum
porulum athaninooungku il


Shuddhananda Bharati

Power of speech

Weigh thy words and speak; because
No wealth or virtue words surpass.


GU Pope

Power in Speech

Speak words adapted well to various hearers' state;
No higher virtue lives, no gain more surely great.

Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.


Mu. Varadarajan

சொல்லின்‌ திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்‌; அத்தகைய சொல்வன்மையைவிடச்‌ சிறந்த அறமும்‌ பொருளும்‌ இல்லை.


Parimelalagar

சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும் பொருளும் இல்லையாகலான்.
விளக்கம்:
[அறத்திறங்களாவன: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள். அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற் சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும் இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம் முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.]


Manakkudavar

(இதன் பொருள்) சொல்லைச் சொல்லுந் திறனறிந்து சொல்லுக; அதனின் மேம் பட்ட அறனும் பொருளும் இல்லை,
(என்றவாறு). தாமறியவே, புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும் பொய்கூறா மையும் உளவாம்; ஆதலான், அறனாயிற்று ; அரசன்மாட்டும் ஏனையோர்மாட்டும் தகுதியறிந்து சொல்லுதலான், பொருளாயிற்று.