குறள் 650

சொல்வன்மை

இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்

inaroolththum naaraa malaranaiyar katrrathu
unara viriththuraiyaa thaar


Shuddhananda Bharati

Power of speech

Who can't express what they have learnt
Are bunch of flowers not fragrant.


GU Pope

Power in Speech

Like scentless flower in blooming garland bound
Are men who can't their lore acquired to other's ears expound.

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.


Mu. Varadarajan

தாம்‌ கற்ற நூற்பொருளைப்‌ பிறர்‌ உணருமாறு விரித்துரைக்க முடியாதவர்‌, கொத்தாக மலர்ந்திருந்த போதிலும்‌ மணம்‌ கமழாத மலரைப்‌ போன்றவர்‌.


Parimelalagar

கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர்.
விளக்கம்:
[செவ்விபெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாதபூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்லமாட்டாதார் நன்கு மதிக்கப்பட்டார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றத னைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்,
(என்றவாறு). இது சுருங்கச் சொல்லுதலே யன்றி, வேண்டுமிடத்து விரித்து சொல்லல் வேண்டு மென்றது.