குறள் 641

சொல்வன்மை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

naanalam yennum nalanutaimai andhnalam
yaanalaththu ullathooum anru


Shuddhananda Bharati

Power of speech

The goodness called goodness of speech
Is goodness which nothing can reach.


GU Pope

Power in Speech

A tongue that rightly speaks the right is greatest gain,
It stands alone midst goodly things that men obtain.

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.


Mu. Varadarajan

நாவன்மையாகிய நலம்‌ ஒருவகைச்‌ செல்வம்‌ ஆகும்‌; அந்த நாநலம்‌ தனிச்சிறப்புடையது. ஆகையால்‌ மற்ற எந்த நலங்களிலும்‌ அடங்குவது அன்று.


Parimelalagar

நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.
விளக்கம்:
['நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வய்த்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.]


Manakkudavar

சொல்வன்மையாவது வார்த்தை சொல்ல வல்லவ னாதல். அரசர்க்குக் கல்வி இன்றியமையாதது போல் அமைச்சர்க்கு இஃது இன்றியமையாதது ஆதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடை மையாவது ; அந்நலம் எல்லா நலத் துள்ளும் உள்ளதொரு நலமன்று ; மிக்கது. () எல்லா நலத்துள்ளும் உள்ள தொருநலமன்று என்றமையால், இன்பம் பயக்கு மென்பதாயிற்று.