குறள் 640

அமைச்சு

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்

muraippadach koolndhthum mutivilavae seivar
thirappaadu ilaaa thavar


Shuddhananda Bharati

Ministers

The unresolved, though well designed
To fulfil an act they have no mind.


GU Pope

The Office of Minister of state

For gain of end desired just counsel nought avails
To minister, when tact in execution fails.

Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.


Mu. Varadarajan

(செயல்களை முடிக்கும்‌) திறன்‌ இல்லாதவர்‌, முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும்‌ (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்‌.


Parimelalagar

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யா நிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்றகூறுபாடு இல்லாதார்.
விளக்கம்:
(அக்கூறுபாடாவன; வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்தும் முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அடைவுபட எண்ணியும், தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யாநிற்பர்; வினை செய்யும் திறன் இல்லாதார்,
(என்றவாறு). இஃது எண்ணவல்லாராய்வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.