குறள் 646

சொல்வன்மை

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

vaetpaththaanj sollip pirarsol payankoadal
maachiyin maachatrraar koal


Shuddhananda Bharati

Power of speech

Spotless men speak what is sweet
And grasp in others what is meet.


GU Pope

Power in Speech

Charming each hearer's ear, of others' words to seize the sense,
Is method wise of men of spotless excellence.

It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.


Mu. Varadarajan

பிறர்‌ விரும்பும்‌ படியாகத்‌ தாம்‌ சொல்லி, பிறர்‌ சொல்லும்‌ போது அச்சொல்லின்‌ பயனை ஆராய்ந்து கொள்ளுதல்‌ மாசற்ற சிறப்புடையவரின்‌ கொள்கையாகும்‌.


Parimelalagar

வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொற் பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி; அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு.
விளக்கம்:
[பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லி, பிறர் சொல் லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல், மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு,
(என்றவாறு). இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.