குறள் 648

சொல்வன்மை

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

viraindhthu tholilkaetkum gnyaalam nirandhthinithu
solluthal vallaarp paerin


Shuddhananda Bharati

Power of speech

The world will quickly carry out
The words of counsellors astute.


GU Pope

Power in Speech

Swiftly the listening world will gather round,
When men of mighty speech the weighty theme propound.

If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner,the world would readily accept them.


Mu. Varadarajan

கருத்துக்களை ஒழுங்காகக்‌ கோத்து இனிமையாகச்‌ சொல்ல வல்லவரைப்‌ பெற்றால்‌, உலகம்‌ விரைந்து அவருடைய ஏவலைக்‌ கேட்டு நடக்கும்‌.


Parimelalagar

தொழில் நிரந்து இனிது செல்லுதல் வல்லார்ப்பெறின் - சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து கேட்கும் - உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்ளும்.
விளக்கம்:
['தொழில்' சாதியொருமை. நிரல்படக் கோத்தல் - முன் சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல். இனி தாதல் - கேட்டார்க்கு இன்பம் பயத்தல். ''சொல்லுதல் வல்லான் நூறாயிரவருள் ஒருவன்,'' என்ற வடமொழி பற்றி, 'பெறின்' என்றார். ஈண்டும் 'கேட்டல்' ஏற்றுக் கோடல். இவை இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) இனிதாகச் சொல்ல வல்லாரைப் பெற்றாராயின், உலகத்தார் மேவி விரைந்து சென்று செய்யுந் தொழில் யாது என்று கேட்பர்,
(என்றவாறு). இது சொற்களைச் சொல்லின் , இனிதாகச் சொல்லவேண்டு மென்றது.